india

img

பிப்.10 முதல் ஒடிசாவில் கல்லூரிகள் திறப்பு

புவனேஸ்வர், பிப்.02-
ஒடிசாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 10ஆம் தேதி முதல்  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, ஒடிசாவிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. 
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

;