india

img

படகு கவிழ்ந்து விபத்து: புலம்பெயர் தொழிலாளரின் குழந்தை பலி

ஒடிசா - ஆந்திர பிரதேச எல்லையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் தொழிலாளரின் குழந்தை உயிரிழந்தது.

ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் சென்றால் காவல் துறை சோதனை நடைபெறும் என்பதால்,  ஒடிசா - ஆந்திர பிரதேச மாநில எல்லையான சித்ரகொண்டா பகுதியில் புலம்பெயர்த் தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு படகு மூலம் செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மீட்புப் படையின் உதவியுடன் தேடுதல் பணிகளைத் தொடங்கினர். இதில் 15 மாத குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காணாமல் போன 8 பேரைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

;