நொய்டாவில் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 17ஆம் தேதி வரை இரவுநேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்கத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.