india

img

உபி: பிப்.15 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு

லக்னோ, பிப்.13-
உபியில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. 
இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 15 முதல் வழக்கமான மாணவர்கள் எண்ணிக்கையுடன் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

;