india

உ.பி.யில் ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

வாரணாசி, பிப்.09-
உத்திரபிரதேசத்தின் வாரணசி-ஜான்பூர் நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
உத்திரபிரதேசம், வாரணாசியில் உள்ள மணிகர்னிகா காட் என்ற இடத்தில் தனது பாட்டியின் இறுதி சடங்கிற்காக 17 பேருடன்  சென்றுவிட்டு ஜீப்பில் திரும்பிகொண்டிருந்தபோது, வாரணசி-ஜான்பூர் நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார் என்று காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;