india

img

கொரோனாவை விரட்ட ருத்ராபிஷேகப் பூஜை....உ.பி. பாஜக முதல்வரின் பலே சிந்தனை.....

லக்னோ:
கொரோனாவை விரட்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்ருத்ராபிஷேகப் பூஜை திங்களன்று நடத்தினார். கொரோனா தொற்றிலிருந்து குணமான இவர் தனது சொந்த மாவட்டமான கோரக்பூரில் இப்பூசையை சுமார் ஒரு மணி நேரம் நடத்தினார்.

கொரோனாவின் இரண்டாவது பரவல் நாடு முழுவதிலும் பல உயிர்களை பலியாக்கி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலமும் இதில் அதிக பாதிப்பை அடைந்துள்ளது. இங்கு பாஜக ஆளும்முதல்வரான யோகி, அவரது துணைமுதல்வர் தினேஷ் சர்மா ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால், தனிமையில் வீட்டிலிருந்தபடியே இருவரும் தம் நிர்வாகத்தைகவனித்து வந்தனர்.இதில், தற்போது குணமான முதல்வர் யோகி, தன் சொந்த மாவட்டமான கோரக்பூருக்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்தார். அப்போது, அங்குள்ளகோரக்நாத் கோயில் மடத்திலுள்ள தனது வீட்டில் கொரோனாவை விரட்ட சிறப்பு பூஜை நடத்தினார். சிவனுக்கு ருத்ராபிஷேகப் பூஜை நடத்தினார். அதற்கான வேத மந்திரங்களை பண்டிதர்கள் ஓத, 11 லிட்டர் பாலாபிஷேகம் சிவலிங்கத்திற்கு நடத்தப்பட்டது.

அருகம்புல்லின் சிறப்பு நீரும் ஐந்துலிட்டர் அளவில் அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகரை வணங்கி துவக்கப் பட்ட இப்பூஜைக்கு கோரக்நாத் மடத்தின்தலைமை பூசாரி ராமானுஜம் திரிபாதி தலைமை தாங்கினார்.கொரோனாவை விரட்ட நடத்தப்பட்டஇந்த சிறப்பு பூஜைக்கு பின் முதல்வர் யோகி மடத்திலுள்ள கோசாலைக்கும் சென்றார். அங்கிருந்த பசுக்களை வணங்கி அவைகளுக்கு உணவளித்து ‘மகிழ்ந்தார்’.பெரிய மாநிலமான உ.பி.யில்,மக்கள் மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கும் நிலையில், முதல்வர் தனதுநேரத்தை கோசாலையில் செலவிட்டிருந்தார். தற்போது கொரோனாவிற்காக கோரக்நாத் மடத்தின் கோயில் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் எவரும் இன்றி அமைதியான சூழல் காணப்பட்டது. இதில், முதல்வர் யோகி தனிமையில் நடத்திய சிறப்பு ருத்ராபிஷேகப் பூசையால் கொரோனா விரட்டியடிக்கப் படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

;