india

img

ஜீன்ஸ் அணிந்ததற்காக சிறுமி அடித்துக் கொலை.... உ.பி. மாநிலத்தில் அரங்கேறிய கொடூரம்....

லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஜீன்ஸ் அணிந்ததற்காக சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார்.லூதியானாவில் சிறிது நாட்கள் தங்கியிருந்துவிட்டு அமர்நாத் பஸ்வானின் மனைவிமற்றும் மகள் ஆகியோர் மட்டும்சொந்த கிராமத்துக்குத் திரும்பியுள்ளனர். அப்போது பஸ்வானின் மகள் ஜீன்ஸ் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. லூதியானாவில் தங்கி இருந்த போது அவர் ஜீன்ஸை அணிய தொடங்கியுள்ளார். அது அவருக்குப் பிடித்து இருந்ததால் கிராமத்துக்குச் சென்ற பிறகும் ஜீன்ஸை அணிந்துள்ளார். 

இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த், அவர்மனைவி, சகோதரர் ஆகியோர்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். ஜீன்ஸ் பேண்டை அணியக் கூடாது என்றும், பாரம்பரிய உடைகளைதான் அணிய வேண்டும் என்றும் கூறியுள்ள னர். சிறுமி அதற்கு மறுக்கவே,ஆத்திரம் அடைந்த உறவினர் கள் சிறுமியை சரமாரியாகத் தாக்கியும், சுவரில் மோத வைத்தும் அடித்தே கொலைசெய்துள்ளனர். பின்னர் உடலை அங்குள்ள மேம்பாலத்து க்குக் கீழே வீசியுள்ளனர்.தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாத்தா மற்றும் உடலை ஏற்றிச்சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலர் மீது வழக்குபதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரகண்ட் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய- அன்றைய உத்தரகண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத், ‘கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்கள் சமுதாயத்துக்கு ஒரு மோசமான முன்மாதிரி’ என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

;