india

img

உத்தரகாசியில் நிலச்சரிவு -  5 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசியில் கனமழையின் காரணமாக ஓரிரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மீட்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகள், பெண்கள் உட்பட பலர்  இந்த நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும், இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

;