india

img

மாட்டின் சிறுநீரைக் குடித்தால் கொரோனா தொற்று வராது.... இதயக் கோளாறு நோயைக் கூட குணப்படுத்தலாம்... பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங் கண்டுபிடிப்பு....

லக்னோ:
‘பசுவின் சிறுநீரை (கோமி யத்தை) தண்ணீரில் கலந்துகாலையில் வெறும் வயிற் றில் குடித்து வந்தால், கொரோனா தொற்று தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்’ என்று உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏசுரேந்திரா சிங் கூறியுள் ளார்.இதுதொடர்பாக, கோமியம் குடிப்பது போன்ற 3 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சுரேந்திரா சிங், இரண்டு அல்லது மூன்று மூடி கோமியத்தை சிறிது குளிர்ந்த நீரில் கலந்து,காலையில் வெறும் வயிற் றில் அருந்த வேண்டும். அதன்பிறகு அரை மணி நேரம் எதையும் சாப்பிடக் கூடாது; அவ்வாறு செய் தால் கொரோனா வராது என தெரிவித்துள்ளார்.

தான் அறிவியலை நம்புகிறேனோ, இல்லையோ, கோமியத்தை முழுவதுமாக நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ள சுரேந்திரா சிங், கொரோனாவுக்கு மட்டுமல்லாமல், இதய நோய்உட்பட அனைத்து விதமான நோய்களையும் பசுவின் கோமியத்தால் குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.மக்களுக்காக 18 மணிநேரம் தன்னால் உழைக்க(!) முடிகிறது என்றால், தன்னுடைய இந்த ஆரோக்கியமான உடல்நிலைக்கும் கோமியம்தான் காரணம்என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

;