india

img

உ.பி.யில் 6,7,8ஆம் வகுப்புகள் தொடக்கம்

லக்னோ, பிப்.10-
உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. 
இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில்  9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

;