ஆக்ரா:
வெடிகுண்டு மிரட்டலால் தாஜ்மஹால்வளாகத்தில் இருந்து பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு, மூடப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உள்ளது. தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மார்ச் 4 அன்று காலையில் போலீஸ்கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் வந்ததைதொடர்ந்து, தாஜ்மஹால் மூடப்பட்டுசுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்ட னர். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் வெடிகுண்டு சோதனை நடத்தினர். “சந்தேகத்திற்கிடமான எதுவும்கண்டுபிடிக்கப்படவில்லை, சோதனை கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன” 11 மணிக்கு மேல் சிறிது சுற்றுலா பயணிகள்அனுமதிக்கப்பட்டனர் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த வெடிகுண்டு மிரட்டல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரோசாபாத்தில்இருந்து வந்ததாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.