india

img

உ.பி மற்றும் பிகாரில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியீடு

லக்னோ, பிப்.05-
உ.பி மற்றும் பிகாரில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்னை அம்மாநில அரசுகள் வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிகாரில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு  அறிவித்துள்ளது.

உத்திபிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

;