india

img

கோவிட் கள, முன்வரிசைப் பணியாளருக்கான காப்பீடு திட்டம் புதுப்பிக்கப்படுகிறது.... சு. வெங்கடேசன் எம் பி.யின் முயற்சியால் மத்திய அமைச்சர் அறிவிப்பு....

மதுரை:
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கோவிட் கள முன்வரிசைப் பணியாளர்க்கான காப்பீடு திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிற வகையில் புதுப்பிக்கப்படுவதாக தகவல்வெளியாகியுள்ளது. இந்நடவடிக்கை எடுத்ததற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி.,நன்றி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.,வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கோவிட் முன் களப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீடுபுதுப்பிக்கப்படாமல் இருப்பதை வேதனையோடு பகிர்ந்து உடனடி யாக அத் திட்டம் நீட்டிக்கப்பட ஆவன செய்யுமாறு ஏப்ரல் 20 செவ்வாயன்று மத்திய சுகாதாரம் -குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.இன்று நல்ல செய்தி கிடைத்துள்ளது. கோவிட் களமுன்வரிசைப் பணியாளர்க் கான காப்பீடுதிட்டம் உட னடியாக அமலுக்கு வருகிற வகையில் புதுப்பிக்கப்படுவதாக செய்தி வந்துள்ளது.

அமைச்சருக்கு நன்றி.ஆனால் இரண்டு கேள்விகள் எஞ்சி நிற்கின்றன. ஒன்று, இதற்கானபாலிசி 24.03.2021 அன்று முடிவடைந்துவிட்டது. அன்றைய தினம் நள்ளிரவு வரை உயிரிழந்த வர்களுக்கான காப்பீட்டிற்கான விண்ணப்பம், ஆவணங்கள் 24.04.2021க்குள்ளாக வரப் பெற்று உரிமப் பட்டுவாடா செய்யப்படும். இதுவே மத்திய சுகாதாரம் - குடும்ப நலத் துறை செயலாளர் இராஜேஷ் பூசனின்24.03.2021 கடிதம் தெரிவிப் பது. ஆனால் அமைச்சகத்தின் டிவிட்டர் செய்தி 24.04.2021 வரையில் இத் திட்டத்தின் கீழ் நீட்டிக்கப்பட்டிருப்பது போன்ற பொருள் தருகிறது. ஆனால் அதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதா? இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இசைவு பெறப்பட்டுள்ளதா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

24.03.2021 நள்ளிரவுக்குப் பின்துவங்கி இன்று வரை உயிரிழந்துள்ளவர்களுக்கான காப்பீட்டின் கதி என்ன?  ஒரு முன் களப் பணியாளர்க்கு கூட காப்பீடு பயன் கிடைக்காமல் போய்விடக்கூடாது. அரசு அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டு மெனக் கோரி இன்று மீண்டும் மத்தியஅமைச்சருக்கு கடிதம் எழுதி யுள்ளேன்.ஒரு வேளை காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கான உரிமம் கிடைக்காவிடில் பி.எம். கேர் நிதி உடனடியாகப் பயன்படுத்தவேண்டும். கோவிட் போராளிகளின் குடும்பம் பரிதவிக்கிற நிலைமை வரக் கூடாது.சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி கோவிட் எதிர்ப்பு களத்தில் அரும் பணி ஆற்றுபவர் கள் எல்லோரும் காப்பீட்டுப் பயன்பெறுகிற வகையில் புதுப்பிக்கப் படுகிற திட்டம் இருக்கவேண்டும். அமைச்சரின் பதிலை எதிர்பார்க்கி றேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

;