india

img

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் இந்தியாவைச் சேர்ந்த லவ்லினா:அரையிறுதியில் தோல்வி

டோக்கியோ : ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்தார் வை சேர்ந்த லவ்லினா. இருப்பினும், அரையிறுதி சுற்றுக்குத் தேர்ச்சி பெற்றதால் வெண்கலம் வென்றார். இன்று காலை டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவின் அரையிறுதி போட்டியில் , துருக்கியைச் சேர்ந்த புஷானெஸ் சுர்மெனலியை , இந்தியாவைச் சேர்ந்த  லவ்லினா எதிர்கொண்டார். இந்த போட்டியில் புஷானெஸ் சுர்மெனலி , 5-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் லவ்லினாவை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

அரையிறுதி வரை சென்ற லவ்லினா , இறுதிச்சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும்,அரையிறுதி வரை சென்றதால் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். 

இதுவரை நடந்த 2021-ன் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா, ஒரு வெள்ளியும் , இரண்டு வெண்கலமும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

;