india

img

இந்தியா- இலங்கை இணைந்து செயல்படட்டும்: இலங்கை புதிய ஜனாதிபதிக்கு ராகுல்காந்தி வாழ்த்து!

இரு நாடுகளும் இணைந்து செயல்படட்டும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று, 9-ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ஜனநாயக, சமதர்ம குடியரசு நாடான இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனுர குமார திசநாயக்கவுக்கு பாராட்டுகளும், மனமார்ந்த வாழ்த்துகளும்.

நமது இரு நாடுகளும், பரஸ்பர வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து இணைந்து செயல்படட்டும் என்று தெரிவித்துள்ளார்.