india

img

இமாச்சலப்பிரதேசம்: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலி  

இமாச்சலப்பிரதேசத்தில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.  

இமாச்சலப்பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் உள்ள போலாட் கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு புதன்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ரோஹ்ரு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ரோஹ்ரு அரசு மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்தனர். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் நோக்ராம், கலாம் சிங், ஹுமா நந்த், அர்க் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்விபத்துக்கான காரணங்களை கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   

;