india

img

நடுரோட்டில் கல்லூரி மாணவியைக் குத்தி கொலை செய்த வாலிபர் - சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு 

ஆந்திராவில் கல்லூரி மாணவி நடுரோட்டில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு பிடித்து வரும் இவர், நேற்று இரவு உணவு வாங்குவதற்காக வீட்டின் அருகே இருக்கும் உணவகத்திற்குச் சென்றுள்ளார். 

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சசிகிருஷ்ணா என்ற வாலிபர் , ரம்யாவை வழிமறித்து வாகனத்தில் வருமாறு கூறியுள்ளார். இதற்கு ரம்யா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசிகிருஷ்ணா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.  இந்நிலையில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரைப் பிடிக்க முயற்சித்த போது, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

பின்னர் ரம்யாவை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் மறைந்திருந்த இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்ய முயன்ற போது, அவர் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  பின்னர், காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பான சி.சி.டி.வி காட்சியும் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள பெண்கள் அமைப்பினர். 75 ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இன்னும் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். 

;