india

img

பி.எஸ்.எல்.வி சி50 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் தொடக்கம்!

பிஎஸ்எல்வி சி-50 ராக்கெடின் 25 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலை 3.41 மணிக்கு வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்நிலையில், இறுதிக்கட்டப் பணியான 25 மணிநேர கவுன்ட் டவுன்  செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது இந்தியாவின் 52வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். 

;