india

img

ஆந்திராவில் மினி பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 13 பேர் பலி

கர்னூல், பிப்.14-
ஆந்திராவில் மினி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டம் சித்தூரை சேர்ந்த 18 பேர் மினி பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது மாதாபுரம் கிராமம் அருகே மினி பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
 இந்த விபத்தில் மினி பேருந்தில் இருந்த ஒரு குழந்தை, 8 பெண்கள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,  இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;