india

அரியானா:  பிப்.24ஆம் தேதி முதல் 3 முதல் 5ஆம் வகுப்புகள் தொடக்கம்

சண்டிகர், பிப்.23-
அரியானாவில் பிப்.24ஆம் தேதி முதல் 3 முதல் 5ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், அரியானாவில் வரும் 24 ஆம் தேதி முதல் 3 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
மேலும், காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;