india

img

சிபிஐஎம் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்!

புதுதில்லி,செப்.29- மார்க்சிஸ்ட் கமுயூனிஸ்ட் கட்சியின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமிக்கப்பட்டுள்ளார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து இன்று புதுதில்லியில் நடைபெற்ற சிபிஎம் பொதுக்குழுக் கூட்டத்தில், 2025 ஏப்ரலில் மதுரையில் நடக்கும் 24ஆவது கட்சி மாநாடு வரை பொலிட் பீரோ மற்றும் மத்தியக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத்தை நியமித்து மத்தியக் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.