நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்மா சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூடுவதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடையை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்தால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் எஸ்மா சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது.
மேலும், வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னரிமை அளித்தும், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
