india

img

37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

மாநிலங்களவையில் காலியாகும் 37 இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
வரும் ஏப்ரல் மாதம் தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களை சேர்ந்த 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், இந்த இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் தேதியை  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்வதற்கு கடைசி மார்ச் 5 ஆம் தேதி; வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் மார்ச் 9-ஆம் தேதி. இதை தொடர்ந்து, மார்ச் 16-ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்.2-ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.