உடல்நலக்குறைவு காரண மாக நிதிஷ் குமாரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் பட்டதாக பாஜக சமாளித்தது. ஆனால் கடந்த வாரம் பாட்னாவில் நடைபெற்ற மோடியின் ரோடு ஷோவில் நிதிஷ் குமாரை பிரதமர் மோடி கண்ணியமாக நடத்த வில்லை. இதனால் தான் நிதிஷ் குமார் வாரணாசிக்கு வரவில்லை என தகவல் வெளியாகி யுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலம் மது பானி பகுதியில் நடைபெற்ற பிரச் சாரத்தில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி கூறுகையில்,”பாஜகவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிதிஷ் குமாரின் முழு ஆதரவு உள்ளது. 2014இல் வந்தவர்கள் 2024இல் போய் விடுவார்கள் என இரண்டு மாதங்க ளுக்கு முன்பு நிதிஷ் குமார் கூறி னார். அதனால் நிதிஷ் குமார் காட்டிய பாதையில் நாங்கள் செல் கிறோம். அவரது ஆசீர்வாதம் மற்றும் வழிகாட்டுதலுடன் பாஜக வை தோற்கடிப்போம்” என்று கூறி னார். தேஜஸ்வியின் பேச்சால் பாஜக கலக்கத்தில் உள்ளது.