மேற்குவங்க மாநிலம் ஆரா மக்களவை தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வேட்பாளர் சுதாமா பிரசாத்தை ஆதரித்து, மோப்டி பஜாரில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.