india

“இனிமேலாவது கவனமாக பேச வேண்டும்” பாஜக எம்.பி. கங்கனாவுக்கு சிரோமணி அகாலி தளம் எச்சரிக்கை

இந்தி திரையுலகில் முன்னணி நடி கையாக உள்ள கங்கனா ரணாவத் நடந்து முடிந்த மக்களவை தேர்  தலில் இமாச்சலப்பிர தேசத்தின் மண்டி தொகு  தியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கடும் போராட்டத்துக்கு இடையேசொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற  வேட்பாளர்கள் அனைவரும் இனிப்பு வழங்கி கொண்டாடிய நிலையில், கங்  கனா மட்டுமே கன்னத்தில் அடி வாங்கி  சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஜூன் 7 அன்று  சண்டிகர் விமான நிலையத்திற்கு இறங் கிய பொழுது அங்கு பாதுகாப்புக்கு இருந்த குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எப்  பெண் காவலர், கங்கனாவின் கன்னத்தில்  திடீரென பளார் என்று அறைவிட்டார். 

“வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என்றும் போராட்டத் தில் ஈடுபட்ட பெண்களை 100 ரூபாய்க்  காக வந்தவர்கள் என்று கங்கனா கூறி னார்; விவசாயிகளின் போராட்டத்தில் எனது தாயும் இருந்தார். அதனால் தான்  அறைந்தேன்” என பெண் காவலர் கூறினார். 

கங்கனாவின் கன்னத்தில் அறைந்த குல்வீந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்  பட்டு, கைது செய்யப்பட்ட நிலையில்,  பாஜக எம்பி கங்கனாவை அறைந்த குல்  வீந்தர் கவுருக்கு ஆதரவாக நாங்கள்  இருக்கிறோம் என பஞ்சாப், ஹரியானா  விவசாயிகள் அறிவித்து குல்வீந்தர் கவு ருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், “இனிமேலாவது கவ னமாக பேச வேண்டும்” என கங்கனா வுக்கு பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர் பாக அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங்  பாதல்,”கங்கனா பேசியது தவறு தான். இதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம். இனிமேலா வது கங்கனா ரணாவத் தனது பேச்சில் கவ னமாக இருக்க வேண்டும்” என எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.