7ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
புதுதில்லி, மே 30- 18-ஆவது மக்களவைத் தேர்தலில் இதுவரை 6 கட்ட மாக 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், கடைசிக்கட்டமாக ஜூன் 1 அன்று 7-ஆவது கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது.
இந்த கடைசிக் கட்டத்தில் பீகாரில் 8, இமாச்சலப் பிரதே சத்தில் 4, ஜார்க்கண்டில் 3, ஒடிசாவில் 6, பஞ்சாப்பில் 13, உத்தரப்பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, சண்டிகர் யூனியன் பிரதேசத் தில் 1 தொகுதி என 57 தொகு திகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதுபோக 4 கட்டமாக நடைபெற்று வரும் ஒடிசா சட்டமன்றத் தொகுதிக்கான 42 தொகுதிகளுக்கும் ஜூன் 1 அன்று வாக்குப்பதிவு நடை பெறுகிறது. 147 தொகுதி களை கொண்ட ஒடிசா சட்ட மன்றத்திற்கும் இதுதான் கடைசி கட்ட தேர்தல் ஆகும்.
இந்நிலையில், கடைசிக் கட்ட தேர்தலுக்கான பிரச்சா ரம் வியாழக்கிழமை மாலை யுடன் ஓய்ந்தது.
வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமனம்
சென்னை, மே 30- மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனை த்தும் ஜூன் 4 அன்று எண்ணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க 39 தொகுதி களுக்கு 57 பார்வையாளர் களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.
குறிப்பாக, தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதி களில் தலா 2 பார்வை யாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடை பெற்றுள்ளதால் கன்னியா குமரி தொகுதிக்கு மட்டும் மூன்று பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
3 நாட்கள் கனமழை பெய்யும்!
சென்னை, மே 30- தென்மேற்கு பருவமழை கேரளத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மே 30 தொடங்கியது.
இதன் காரணமாக ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கிருஷ்ணகிரி, தரும புரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம் புத்தூர் மாவட்ட மலைப்பகு திகள், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.