india

img

வெப்ப அலை உயிரிழப்பு எண்ணிக்கை மறைக்கும் பாஜக ஆளும் மாநில அரசுகள்

பருவநிலை மாற்றத்தால் கோடைகாலம் முடிவடைந்த பின்பும் வட மாநிலங்களில் வெயில் மிக மோசமான அளவில் கொளுத்தி வருகிறது. தில்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், ஒடிசா, ஹரியானா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சண்டிகர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 45 முதல் 50 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் மிரட்டி வருகிறது. தில்லியின் ஒரு சில பகுதிகள், ராஜஸ்தானின் பலோடி, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் 53 டிகிரி அளவில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் வீடுகளிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்து வருகின்றனர். வடமாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.

200-ஐத் தாண்டியது 
இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியன்று 54 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து சனியன்று மாலை நிலவரப்படி வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் உண்மையில் வட மாநிலங்களில் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐக் கடந்துள்ளதாகவும், சரியாக கணக்கிடப்படாததால் உயிரிழப்பு எண்ணிக்கை 100க்குள் இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. பாஜக ஆளும் ராஜஸ்தானில் மட்டும் வெப்ப அலை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஆளும் பாஜக அரசு இதனை மறைத்து வருவதாக அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதன்காரணமாகவே ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, வெப்ப அலையை சமாளிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் மோடி அரசுக்கு உத்தரவிட்டது.

27 தேர்தல்  அலுவலர்கள் உயிரிழப்பு

7 கட்டமாக நடைபெற்று வரும் 18ஆவது மக்களவை தேர்த லின் கடைசி கட்டத் தேர்தல் சனியன்று நடைபெற்றது. தேர் தல் நடைபெற்ற பகுதிகள் அனைத்தும் வடமாநிலங்கள் என்ற நிலையில், தேர்தல் பணி க்கு வந்த அலுவலர்கள் வெப்ப அலையை  தாங்க முடியாமல் வாக்குச்சாவடி மையங்களி லேயே சுருண்டு விழுந்தனர். சனி யன்று மாலை 4 மணி நில வரப்படி 27 தேர்தல் அலுவலர் கள் வெப்ப பக்கவாதத்தால் உயிரிழந்தனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாப்பூரில் 15 தேர்தல் அலுவ லர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
போதுமான முன் னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால் பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிர தேசம் மாநிலங்கள் வெப்ப அலையால் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள் ளன. ராஜஸ்தானில் 100க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவா தத்தால் உயிரிழந்துள்ள நிலை யில், 600க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதே போல உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெப்ப பக்கவா தத்தால் 80க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ள நிலையில், மேலும் 1200 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால் ராஜஸ் தான், உத்தரப்பிரதேசத்தில் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வானிலை அறிவிப்புகளை கண்டுகொள்ளாத பாஜக அரசுகள்

இந்திய வானிலை மையம் ஒவ்வொரு 4 மணிநேர மும் வெப்ப அலை தொ டர்பாக எச்சரிக்கை அறிவிப்பு களை வெளியிட்டு வருகிறது. தில்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள் ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில அரசு கள் மக்களுக்கு எச்சரிக்கை யும், வேலை நேரத்தை மாற்றி யும், பல்வேறு மக்கள் நலன் எச்சரிக்கை விதிகளை செயல் படுத்தியுள்ளன. ஆனால் பாஜக ஆளும் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தி யப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை பற்றி எச்சரிக் கையோ, எச்சரிக்கை விதிகள் தொடர்பான உத்தரவோ  எதுவும் பிறப்பிக்கப்பட வில்லை. இதனால் பாஜக ஆளும் மாநிலங்களில் வெப்ப அலையின் பாதிப்பு உச்சத் தில் உள்ளன.

மோடியின் “ஏசி அறை தியான வீடியோ” தான் முக்கியமாம்!

பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் கன்னி யாகுமரியில் 45 மணிநேர தியானம் என்ற பெயரில் வெள்ளி, சனி ஆகிய 2 நாட்க ளில் தனது அரசியல் ஆதாயத்திற்காக சிறப்பு  ஷூட்டிங் நடத்திக் கொண்டார். வட மாநிலங்கள் பாலைவன பூமியாக கொதித்துக் கொண்டிருக் கும் நிலையில், வெப்ப அலையில் இருந்து மக்களை காக்க மோடியின் கட்சியான பாஜக ஆளும் மாநிலங்கள் எதுவும் செய்யவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் மோடியின் தியான வீடியோக்களை சமூகவலைத் தளங்களில் விருப்பங்களை தெரிவித்து, பகிர்ந்து பிரபலமாக்கும் வேலையை மட்டுமே கவனித்துள் ளனர். அதாவது வெப்ப அலையால் மக்கள் மடிந்தால் என்ன ஏசி அறையில் தியானம் செய்த மோடியின் வீடியோ மட்டுமே முக்கியம் என பாஜக ஆளும் மாநில அரசுகள் தங்களின் இழிவான செயல் பாட்டை வெளிப்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

 

;