india

img

121 பேர் உயிரிழந்த ஹாத்ரஸ் சம்பவம் 3,200 பக்க குற்றப்பத்திரிக்கையில் போலே பாபாவின் பெயர் இல்லை!

உத்தரப் பிரதேசம், ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தராரா கிராமத்தில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி சத்ஸங் நாரா யண் சாகர் விஷ்வ ஹரி போலேபாபா, நடத்திய ஆன்மீ கக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 112பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர்.

போலே பாபா குற்றம் செய் திருந்தால் தப்ப முடியாது என உத்தரப்பிரதேச காவல்துறை கூறியது. இந்நிலையில், தற் போது இவ்வழக்கு தொடர்பாக 3,200 பக்கங்களில் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டுள் ளது. இந்தக் குற்றப்பத்திரிக்கை யில் 2 பெண்கள் உட்பட 11  பேர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டுள்ளனர். ஆனால், இதில் போலே பாபாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தலித் சமூகத்தை சேர்ந்தவரான அவர் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்காது என்பதால் அவரை இவ்வழக்கிலிருந்து தப்ப விடப் பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுகுறித்து குறிப்பிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, “போலே பாபாவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லாதது ஜனநாயகத்துக்கு எதிரானது. 121 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குக் காரணமான அவரை, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தப்ப வைக்க முயல்கிறது” என்று தெரிவித்தார்.