india

img

குஜராத்: சிப்ஸ் பாக்கெட்டில் கிடந்த தவளை!

குஜராத்தின் ஜாம்நகரில் பொட்டேட்டோ வேஃபர்ஸ் எனப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் இறந்த தவளை கண்டுபிடிக்கப்பட்டது, சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் புஷ்கர் தாமில் வசித்து வருபவர் ஜாஸ்மின் படேல்.  இவர், நான்கு வயது சிறுமிக்கு, செவ்வாய்க்கிழமை மாலை அருகிலுள்ள கடையில் சிப்ஸ் பாக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது, அந்த பாக்கெட்டில் சிதைந்த நிலையில் தவளை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ஜாஸ்மின் படேல் தகவல் தெரிவித்துள்ளார். தகவலி பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், பாலாஜி வேஃபர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த சிப்ஸ் பாக்கெட்டில் இறந்த தவளை ஒன்று கிடந்துள்ளது. ஜாஸ்மின் படேல் என்பவர் அளித்த புகாரின் பேரில் செவ்வாய்கிழமை இரவு, சிப்ஸ் வாங்கிய கடையை பார்வையிட்டோம். முதற்கட்ட விசாரணையில் சிதைந்த நிலையில், தவளை ஒன்று கிடந்தது உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியபடி, விசாரணை நடத்த சிப்ஸ் பாக்கெட்டுகளின் மாதிரிகளை சேகரித்துள்ளோம் என்றார்.