health-and-wellness

img

அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபயம் - புதிய ஆய்வில் தகவல்

அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருள்களை சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் விரைவில் மரணம் ஏற்படும் அபயம் உள்ளது என்று புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலை ஆய்வு செய்த சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தினர். பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிக்கையில் கடந்த மாதம் 19 தேதி ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர்.

அந்த ஆய்வு முடிவில் 
ஆபத்தான நோய்களான இருதய நோய், பக்கவாதம், மற்றும் இளம் வயது மரணம் குறித்து SFU சுகாதார அறிவியல் பேராசிரியர் ஸ்காட் லியர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்களால் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் புதிய ஆய்வை வெளியிட்டனர்.

உலகத்தில் உள்ள குறைந்த, நடுத்தர மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள பல்வேறு இன மக்களின் உணவு முறைகளை பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கனடா உட்பட 21 நாடுகளில் 1,37,130 பங்கேற்பாளர்களின் உணவு முறைகளை 16 ஆண்டுகளாக பகுப்பாய்வு செய்த போது, ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
அதாவது மக்கள் நவீன உணவு முறையில் அதிகளவு சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை உட்கொள்கின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்தும் சர்க்கரை அளவும் அதிகரித்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட உணவும், சர்க்கரையும்.

தானியங்களை , சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் , முழு தானியங்கள் , மற்றும் வெள்ளை அரிசி. என மூன்று வகையாக பிரிக்கப்படுகிற்து.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் சுத்திகரிக்கப்பட்ட (எ.கா வெள்ளை ) மாவுடன் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கும். அதில் வெள்ளை ரொட்டி , பாஸ்தா , நூடுல்ஸ், காலை உணவு தானியங்கள் , காய்கறியுடன் இணைக்கப்பட்ட உப்பு பிஸ்கட்டுகள் மற்றும் பேக்கரி பொருட்கள் ஆகியவை அடங்கும்.
முழு தானியங்களில் முழு தானிய மாவுகளும் (பக்வீட் எனப்படும் கொண்டைக்கடலை போன்ற பயிறு ) மற்றும் அப்படியே அல்லது விரிசல் நிறைந்த முழு தானியங்களும் ( எஃகு வெட்டு ஓட்ஸ்) அடங்கும்.

சுத்திகரிக்கப்பட்ட தானிய உணவுகளின் ஆபத்து.

ஒரு நாளைக்கு 7க்கும் மேற்பட்ட சுத்திகரிப்பட்ட தானியங்களை பயன்படுத்துவதால் 27% இளவயது மரணம் அதிகரித்துள்ளது. இதனால் 33% இருதய நோய் வருவதற்கான அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் 47 % பக்கவாதம் ஏற்படும் ஆபத்து உள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சாப்பிடும் உணவு வகைகள்

பழுப்பு அரிசி மற்றும் பார்லி போன்ற முழு தானிய உணவுகளை சாப்பிடுவதும், குறைவான சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை மற்றும் கோதுமை பொருட்கள் உணவில் இருப்பது அவசியம். முழு தானியங்கள் அல்லது வெள்ளை அரிசியை உட்கொள்வதால் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் இல்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் ஒட்டுமொத்த நுகர்வுகளைக் குறைத்து மற்றும் தரமான கார்போஹைட்ரேட்களைக் கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்ல உடல் நலத்திற்கு அவசியம் என்பதை இந்த ஆய்வு அறிவுறுத்துகின்றது.


 

;