உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்த லுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றது. முதல் கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10 அன்று நடைபெறுகிறது. பாஜக தனக்கு ஆதரவு திரட்டு வதற்காக முழுமையாக இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சி நிரலையே நம்பியிருப்பது தெளிவாகவே தெரிகிறது.
ஆதித்யநாத்தின் வெறித்தனம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்தும் மதவெறி ஊட்டப்பட்ட பெரும் வெறிக் கூச்சலு டன் முஸ்லீம் எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கின்றனர். ஆதித்யநாத் தனது பிரச்சாரத்தைத் தொடங்கும்போதே இது மாநிலத்தில் 80 சதவீதமாக இருக்கின்ற இந்துக்களுக்கும் 20 சதவீதமாக இருக் கின்ற முஸ்லீம்களுக்கும் இடையேயான சண்டை என்ற கொக்கரிப்புடன் பிரச்சாரத்தைத் தொடங்கி னார். பின்னர் அவர் 20 சதவீதம் என்று கூறியதை நியாயப்படுத்துவதற்காக இவர்கள்தான் ராமர் கோவில்- காசி விஸ்வநாத் நடைபாதை, மதுரா, பிருந்தாவன் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற னர் என்று கூறினார். மேலும் அவர், முஸ்லீம்கள் மாபியாக்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும்தான் இரக்கம் காட்டுகிறார்கள் என்றும் கூறினார். மதவெறி நஞ்சுடன் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஆதித்யநாத் பிரச்சாரத்தின் மையக்கருத்து என்ன வென்றால், ஒரு பக்கத்தில் இந்துக்கள்; மறுபக்கத்தில் இருப்போர் எல்லாம் இந்து கோவில்களை எதிர்ப் போர் மற்றும் பயங்கரவாதிகள், கிரிமினல்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள் என்பதாகும். சமாஜ்வாதிக் கட்சியினர், ஜின்னாவை நேசிப்பவர்கள் என்றும், மாபியாக்களையும் பயங்கரவாதிகளையும் ஆதரிப்ப வர்கள் என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆதித்யநாத் வெளிப்படையாகவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அவர்கள் ஜின்னாவின் பக்தர்கள், நாம் சர்தார் பட்டேலைக் கும்பிடுபவர்கள்” என்று பதிவு செய்திருக்கிறார்.
அமித் ஷாவும் மதவெறி நஞ்சை உமிழ்வதில் மிக வும் பின்னால் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அமித் ஷா தன் முதல் கூட்டத்தை கைரானா நகரில் நடத்தினார். அங்கே அவர் பேசும்போது, 2017 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அங்கே வாழ்ந்த இந்துக்கள் சமாஜ்வாதி அரசாங்கத்தின் அச்சுறுத் தல்கள் காரணமாக வேறிடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள் என்றும், இப்போது பாஜக ஆட்சி நடைபெறுவதால் அவர்கள் எவ்வித அச்சமு மின்றி வாழ முடியும் என்றும் கூறினார். தியோபந்த் என்னுமிடத்தில் நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் 2013இல் முசாபர்நகர் கலவ ரங்கள் நடைபெற்ற சமயத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட வர்களுக்கு ஆதரவாக உரைநிகழ்த்தினார். அவர், அந்தக் கலவரத்தைத் தூண்டியவர்கள் பாதிக்கப்பட்ட வர்கள் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட் டப்பட்டவர்கள் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றார். மேலும் பாஜக தலைவர்களுக்கு எதிராகப் பொய் வழக்குகள் புனையப்பட்டன என்றும் நீதி கிடைப்பதற்காக அவர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது என்றும் கூறினார். மேலும் அகிலேஷ் யாதவ் அரசாங்கத்தின் கீழ் கிரிமினல்கள் சுதந்திரமாகச் செயல்பட்டார்கள் என்றும் அந்தக் கிரிமினல்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வர்களாக இருந்ததால் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றும் கூறினார்.
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள முதல் மூன்று கட்டங்களுக்கான தேர்தல்களிலும் பாஜக மதுராவில் முஸ்லீம்களின் ஈத்கா பள்ளி வாசல் இருக்கும் இடத்தில் கோவில் கட்டும் பிரச்ச னையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன. மாநி லத்தின் துணை முதல்வராக இருக்கக்கூடிய கேசவ் பிரசாத் மௌரியாவே இந்தக் கோரிக்கையை உயர்த்திப்பிடித்திருக்கிறார். எனவே, அயோத்தி, காசி மற்றும் மதுரா என்பவை இவர்களின் ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரத்திலும் முக்கிய இடம் பெற்றிருக்கின் றன. இவ்வாறு மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு அழுத்தம் கொடுத்து, அங்கே மதவெறித் தீயை விசிறிவிட பாஜக முயற்சிகள் மேற்கொண்டிருப்பதிலிருந்து அவர்கள் எந்த அளவிற்கு விரக்தியின் எல்லைக்குச் சென்றிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. ஏனெனில் அங்கேயுள்ள எதார்த்த நிலைமைகள் இவர்களுக்கு எதிராக மாறியிருக்கின்றன.
ஜாட் - முஸ்லிம்கள் உறவு
வரலாறு படைத்திட்ட விவசாயிகள் இயக்கம், 2013 செப்டம்பரில் முசாபர்நகரில் நடைபெற்ற கல வரங்களுக்குப்பின்னர் ஜாட் - முஸ்லீம்கள் இடையே இருந்துவந்த பகைமை உணர்வைப் பெரிய அள விற்கு சரி செய்திருக்கிறது. லக்கிம்பூர் கேரியில் மிகவும் கொடூரமான முறையில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் கடும் கோபாவேசத்தை ஏற்படுத்தி, பாஜகவினர் செல்லு மிடங்களில் எல்லாம் அவர்களுக்கு எதிர்ப்பை பெற்றுத் தரக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது. பல கிராமங்களில் விவசாயிகள் ஊருக்குள் நுழை வதற்கே அனுமதிக்கப்படாமல் நிறுத்தப்படுகின்றனர். எனவேதான் பாஜகவினர் மக்களை மதவெறி அடிப்ப டையில் பிளவுபடுத்திடும் பழைய பாணியையே புதுப் பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
பாஜக அரசாங்கத்தில் இதுநாள்வரையிலுமி ருந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் பாஜகவின் பரிதாப நிலையை உணர்ந்து அதனைக் கைவிட்டு விட்டு, சமாஜ்வாதிக் கட்சியில் சேர்ந்துகொண்டி ருப்பது, பாஜகவின் நம்பிக்கை சுருங்கிக்கொண்டி ருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. 2017 சட்ட மன்றத் தேர்தலின்போது யாதவ் அல்லாத பிற் படுத்தப்பட்ட சாதியினரையெல்லாம் பாஜக வளைத்துப்போட்டிருந்தது. இப்போது அவர்கள் மீண்டும் சமாஜ்வாதிக் கட்சிக்குத் திரும்பிவிட்டனர். மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பது போலவும், மாநிலத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் குறைந்துவிட்டதுபோன்றும் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்கள் எதுவும் மக்கள் மத்தியில் எடுபட வில்லை.
வேலைவாய்ப்பு வீழ்ச்சி
சிஎம்ஐஇ எனப்படும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) வெளியிட்டுள்ள தரவுகள், உத்த ரப்பிரதேசத்தில் 2016இல் 38.5 சதவீதத்திலிருந்து வேலைவாய்ப்பு விகிதம் 2021 டிசம்பரில் 32.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது எனக் காட்டு கின்றன. ரயில்வே ஆள்சேர்ப்புத் தேர்வுகளில் நடை பெற்ற ஊழல் இளைஞர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்தது. இவ்வாறு போராடிய இளை ஞர்கள்மீது போலீசார் மேற்கொண்ட காட்டுத்தன மான தாக்குதல்கள் இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை விளைவித்துள்ளன. அவையெல்லாம் இத்தேர்தலில் பாஜக-விற்குப் பலத்த அடியை அளித்திடும் என்பதில் ஐயமில்லை.
எனவேதான் பாஜகவினர் இப்போது ஜின்னா வுக்கு எதிராகக் கூச்சல் போடத் தொடங்கியிருக்கி றார்கள். பாஜக-வை எதிர்ப்பவர்கள் எல்லாம் ஜின்னா வின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்துகிறார்கள். கோவிட் தொற்றின் இரண்டாவது அலைக் காலத்தில் கங்கையில் ஏராளமான சடலங்கள் மிதந்து சென்ற அவலக் காட்சியை உ.பி. மக்கள் பார்த்தார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கங்கை கரையில் புதைக்கப்பட்டார்கள். பொது சுகாதார முறை பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், விரிவாக்கப்பட்டி ருப்பதாகவும் அரசுத்தரப்பில் கூறப்பட்டபோதிலும், நிதி ஆயோக் சுகாதார அட்டவணை வெளியிட்டுள்ள அறிக்கையானது, நாட்டிலுள்ள பெரிய மாநிலங்க ளில் உத்தரப்பிரதேசத்தில்தான் பொது சுகாதார அமைப்பு மிக மோசமாக இருக்கிறது என்று கூறியி ருக்கிறது. அதேபோன்றே நிட்டி ஆயோக் வெளி யிட்டுள்ள பன்முக வறுமை அட்டவணையும், நாட்டில் வறுமை நிலையிள் உள்ள மாநிலங்களின் வரிசை யில் உத்தரப்பிரதேசம் கீழேயிருந்து மேலே மூன்றா வதாக இருப்பதாகவும், 38 சதவீதத்தினர் ஏழைகளாக இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
இவ்வாறு படுமோசமான பதிவினைப் பெற்றி ருக்கக்கூடிய நிலையில்தான் மோடி-அமித்ஷா-ஆதித்யநாத் வகையறாக்கள் அயோத்தி, காசி விஸ்வ நாத் கோவில்களுக்கு இடையே நடைபாதை அமைப்பதன்மூலமும், எதிர்காலத்தில் அதனை மதுராவிற்கும் நீட்டிப்பதன் மூலமும் இந்துத்வா லட்சியத்திற்கு அளப்பரிய பங்களிப்புகளைச் செய்தி ருப்பதாகவும் அந்தத் திசைவழியில் நாடு சென்று கொண்டிருக்கிறது என்றும் பீற்றிக்கொண்டிருக்கின்ற னர். இந்தச் செய்தியில் மறைந்துள்ள விஷயம் என்ன வென்றால், முஸ்லீம்களுக்கு அவர்களுக்கு உரிய இடத்தை அளிப்பதன்மூலமே இவை அனைத்தை யும் எய்த முடிந்திருக்கிறது என்பதாகும். பாஜகவிற்கு அமித்ஷாவின் வார்த்தைகளில் சொல்வதானால், இது வெறுமனே ஒரு மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் அல்ல, மாறாக இந்தியாவின் எதிர்காலத் தைத் தீர்மானிக்கக்கூடிய ஒன்று. இந்துத்துவாவின் எதிர்காலம் இங்கே அவர்கள் பெறும் வெற்றியைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. அதுதான் பாஜக தலைமையின் விரக்திக்கும் காரணமாகும்.