headlines

img

‘பெய்டு’ நேர்காணல்?

திடீரென்று தந்தி டிவிக்கு நேர்காணல் அளித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.  கடந்த பத்தாண்டு கால ஆட்சியில், அநேகமாக ஒரு ஊடகத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முதல் முறையாக மோடி அளித்துள்ள நேர்காணல் இது என்றால் மிகையல்ல. 

அவர் ஒரு போதும் ஊடகவியலாளர்களை சந்தித்தது இல்லை. ஊடகவியலாளர்களின் எந்தக் கேள்வியையும் அவர் எதிர்கொண்டதும் இல்லை. அச்சு மற்றும் மின்னணு ஊடகங் களிலும் சமூக ஊடகங்களிலும் அவரது ஆட்சி யையும் கொள்கைகளையும் விமர்சித்த ஊடக வியலாளர்களை அவர் விட்டு வைத்ததும் இல்லை. பல ஊடகங்கள் முடக்கப்பட்டன. ஏராளமான பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்குகள்  புனையப்பட்டன. பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் பத்தாண்டுகள் கழித்து முதல் முறையாக சிரித்த முகத்துடன், வெள்ளை வெளேரேன வேட்டி, சட்டை அணிந்து சிறப்புப் பேட்டி அளித்திருக்கிறார். 

இந்தப் பேட்டி முழுவதும், தமிழ்நாட்டை மையமாகக் கொண்டது. அதை அடையாளப் படுத்தும் விதமாகவே அவர் வேட்டி, சட்டை யில் வந்தது மட்டுமல்ல; முழுக்க முழுக்க தமிழக அரசியல் நிலைமை, தமிழ்நாட்டின் கலாச்சாரம், தமிழ்மொழியின் பெருமை, தமிழ் மக்களின் உணவுப் பண்பாடு ஆகியவற்றில் துவங்கி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை ‘நல்ல சாதி’யை சேர்ந்தவர் என்பது உள்பட பேட்டியின்போது திருவாய் மலர்ந்திருக்கிறார் மோடி. 

இந்தத் தேர்தலில் பாஜகவும் நரேந்திர மோடியும் தமிழ்நாட்டில் எப்படியாவது கால்  தடத்தை பதித்துவிடமுடியாதா என்ற நோக்கத்து டன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே பிரதமர் மோடியுடன் இந்த சிறப்பு நேர்காணலும் திட்டமிட்டு வெளி யிடப்பட்டுள்ளது என்றே கருத இடமுள்ளது. 

மோடியிடம் நேர்காணல் மேற்கொண்ட தந்தி டிவி சிறப்புச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகள் மூலம் கிடைக்கப்பெற்ற பதில்கள் அனைத்துமே மோடியின் பெருமிதங்கள், பாஜக வின் பெருமை, மோடியின் ராமபக்தி, தமிழ் மீது  மோடிக்குள்ள விருப்பம்... என முழுக்க முழுக்க  மோடி என்ற மனிதரை மேலும் பிரம்மாண்ட மாக - மேலும் தமிழகத்திற்கு மிக நெருக்கமான வராக முன்னிறுத்தும் விதமாகவே வந்துள்ளன.  தப்பித் தவறிக் கூட கடந்த பத்தாண்டு காலத்தில் பாஜக அரசு மேற்கொண்ட அட்டூழியங்கள், மதவெறி- ரத்தவெறியாட்டங்கள், கார்ப்பரேட் - மதவெறியர் கூட்டணி உள்ளிட்ட எதுவும்  கேள்விகளாக முன்வைக்கப்படவில்லை. 

தேர்தல் காலத்தில் ஊடகத்துறையில் ‘பெய்டு  நியூஸ்’ எனப்படும் - முன்கூட்டி பணம் கொடுத்து பிரசுரிக்கப்படும் செய்திகள் ஆபத்தான முன்னு தாரணங்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் மோடியை முதன்மைப்படுத்தும் தந்தி டிவி நேர்காணலும் அத்தகைய ஒன்றே எனக் கருதலாம்.