headlines

img

பாபா ராம்தேவ் மோசடிக்கு துணைபோன மோடி அரசு

பதஞ்சலி நிறுவனத்தின் அலோபதி மருத்துவம் குறித்த தவறான விளம்பரங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், இதுபோன்ற விளம்பரங்களைத் தடுக்கக்கூடிய சட்டத்தையே ஒன்றிய அரசு ரத்து செய்யப் போகிறது  என்றால் இந்த அரசு யார்பக்கம் நிற்கிறது? அறி வியலுக்கு புறம்பான செயல்களை ஊக்குவிப் பதே ஒன்றிய பாஜக அரசின் வாடிக்கையாக உள்ளது. 

கடந்த 10ஆண்டு கால மோடி ஆட்சியில் பாஜகவுக்கு வேண்டப்பட்டவர்கள் கொழிக்க ஆட்சியாளர்கள் பக்க பலமாக இருந்தனர். ரூ.10  ஆயிரம் கோடி  மதிப்புள்ள பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும் அதில் ஒன்று. யோகா ராம்தேவுக்கு சொந்தமான இந்நிறுவனம் உலகம் முழுவதும் பெரும்பகுதி மக்களால் பின்பற்றப்படும் ஆங்கில மருத்துவத்திற்கு எதிராக தவறான கருத்துக் களை பரப்பிவந்தது. மேலும் தனது ஆயுர்வேத  தயாரிப்புகளை பிரபலப்படுத்த இந்த யுக்தியை அந்நிறுவனம் கடைப்பிடித்தது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் இவர்கள் தயாரித்த  கொரோனில் என்ற மருந்து அந்த நோயை கட்டுப்படுத்தும் என்று  தவறாக விளம்பரம் செய்யப்பட்டு கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டது. எத்தைத்தின்றால் பித்தம் தெளி யும் என்ற நிலையில் அப்போது இந்திய மக்கள்  இருந்ததால் அந்த சந்தர்ப்பத்தை ராம்தேவ் நன்றாக பயன்படுத்திக்கொண்டார்.  

ஆங்கில மருத்துவம் குறித்து மக்களிடம் அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதை தடுக்கக்கோரி இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐஎம்ஏ) உச்சநீதி மன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றம் அறி வுறுத்திய பிறகும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பதஞ்சலி நிறு வனத்தின் விளம்பரம் வெளியிட தடையாக உள்ள மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 170 மற்றும் அது  தொடர்பான விதிகளை நீக்குவதற்கான நட வடிக்கையைத்தான் எடுத்தது. பதஞ்சலி வழக்கு தொடர்பாக புகார்தாரருக்கும் ஒன்றிய அர சுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பதில்கள் மற்றும் பிற ஆவணங்கள் மூலம் இந்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 

சட்டப்பிரிவு 170 எந்த மருந்தின் நன்மை களையும் மிகைப்படுத்தி விளம்பரப்படுத்து வதைத் தடை செய்கிறது. கடந்த 2018ஆம் ஆண்டுதான் இந்த பிரிவு 170 சேர்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பிரிவையே ரத்து செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள் ளது ஏன் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் வினவியுள்ளது.  

எனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் அளிக்கப் போகும் தீர்ப்பு  ஆட்சியாளர்களின் உதவியுடன் மக்களின் பணத்தை சுருட்டும் மோசடிக் கும்பல்களுக்கு சம்மட்டி அடி கொடுப்பதாக இருக்க வேண்டும்.