headlines

img

ஆர்எஸ்எஸ் தலைவரின் அர்த்தமற்ற உளறல்

நவீன இந்தியா சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். அம்பானி, அதானி போன்ற ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள் தேசத்தின் வளம் அனைத்தையும் கொள்ளையடிக்கின்றனர். மறு புறத்தில் பெரும்பகுதி உழைக்கும் மக்கள் வறு மையாலும், வேலையின்மையாலும் அல்ல லுறுகின்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பை பொறுத்தவரை தேசத்தின் பிரச்சனைகள் அனைத் தையும் மதமாக குறுக்கிப் பார்க்கின்றனர்.

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் விஜயதசமி மற்றும் அந்த அமைப்பு உருவாக்கப்பட்ட தினத்தில் உரை யாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆன்மீகம்தான் இந்தியாவின் ஆன்மா  என்று கூறியுள்ளார். விடுதலை பெற்ற சுதந்திர இந்தியாவின் ஆன்மாவாக இருப்பது மதச்சார் பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி போன்ற கோட்பாடுகள்தான். இந்த விழுமியங்களை அழித்து இந்தியாவை மதவெறி இந்து ராஷ்டி ராவாக மாற்ற ஆர்எஸ்எஸ் முயல்கிறது. இவர்கள் சொல்லும் ஆன்மீகம்கூட அன்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. வெறுப்பை மையமாகக்  கொண்டது.

இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் இன்றைய முக்கியப் பிரச்சனை மதமாற்றம்தான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோகன் பகவத் முயன்றிருக்கிறார். பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து மதங்களுக்கும் பொருந்தும். 

ஆனால் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவது போலவும், மதமாற்றம் காரண மாக மற்ற மதத்தவரின் எண்ணிக்கை அதிக ரிப்பது போலவும் சித்தரித்து மக்கள் தொகை கட்டுப்பாடு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று உளறியுள்ளார் மோகன் பகவத்.

இப்போதும் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. இது ஒப்பீட்டளவில் சரிந்துள்ளதாக அரசு வெளியிட்ட புள்ளிவிபரங்களில் கூட தரவுகள் இல்லை. மாறாக, மறுபுறத்தில் பல்வேறு காரணங்களால் சிறு பான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்து வரு கிறது. ஆனால் அவ்வப்போது பிற மதத்தவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது போல பூச்சாண்டியை ஆர்எஸ்எஸ் அமைப்பு காட்டிக்கொண்டே இருக்கிறது. 

இந்தியாவில் இப்போதைய தேவை அனைத்து மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், அடிப் படை வசதிகளை மேம்படுத்துவதுதான். அதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு என்றைக்கும் கவலைப் பட்டதில்லை. அவர்களுடைய கொள்கையே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வது தான்.இதை மூடிமறைக்க மக்களிடம் மதரீதி யான பகைமையை தூண்டிவிட்டுக் கொண்டே யிருப்பார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரு விஷப் பாம்பு. இந்திய மக்கள் அனைவரும் அதனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

;