headlines

img

பாஜகவின் வயிற்றெரிச்சல்

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இதையொட்டி, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணை த்து, கூட்டணி அமைக்கும் முயற்சிகளை பல் வேறு கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டுள் ளனர். அந்த வகையில், பீகார் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், பல்வேறு மாநிலங்களின் முதல்வர் கள், தேசியக் கட்சிகளின்  தலைவர்களைச் சந்தித்து, புதிய ஒருங்கிணைப்புக்கான ஆதர வைக் கோரினார்.

இதையடுத்து பீகார் தலைநகர் பாட்னாவில் வெள்ளியன்று நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சி களின்  கூட்டத்தில் காங்கிரஸ், சிபிஎம், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ஆம்ஆத்மி,  மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற னர். எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது என்று நக்கல் அடித்துக்கொண்டிருந்த பாஜக தலை வர்கள் பாட்னாவில் எதிர்க்கட்சித்  தலைவர்க ளின் அணிவகுப்பைப் பார்த்துக்  கதி கலங்கிப் போயிருப்பது அவர்கள் புலம்புவதைப் பார்த்தாலே தெரிகிறது.

“எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சந்தர்ப்பவாத அரசியல்”  என்று   பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது வயிற்றெரிச்சலை கொட்டி யுள்ளார். அமலாக்கத்துறையை ஏவி அரசி யல் கட்சிகளை தன் வசப்படுத்த அலைந்து கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைவர் இப்படிப் பேசுவதை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். “புகைப்பட காட்சிக்காக அவர்கள் ஒன்றுகூடி இருக்கிறார்கள். எவ்வளவு முயன்றா லும் அவர்களால் ஒன்றிணைய முடியாது”  என்று உள் துறை அமைச்சர் அமித்ஷா சாபம் விட்டுள்ளார்.   

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் நம்பாடு திண்டாட்டம் என்பதை பாஜக தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே தான் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க  அக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் வரு மான வரி, சிபிஐ, அமலாக்கத்துறையை ஏவி விட்டு மிரட்டிப் பணிய வைக்க முயல்கிறார்கள்.

தமிழகத்திலும்  இத்தகைய மிரட்டல் அரசி யலை ஒன்றிய அரசு முயன்று  தோற்றுப்போயி ருக்கிறது. அதிமுக, பகுஜன் சமாஜ் போன்ற ஊழல் கட்சிகளை பாஜக மிரட்டலாம். பாஜகவை சித்தாந்த ரீதியில் எதிர்த்தால் தான் இந்தியாவுக்கு எதிர்காலம் இருக்கிறது என்று கருதும் எந்த ஒரு கட்சியையும் மிரட்டிப் பணிய வைக்கமுடியாது.

இனி நாம் ஒன்றுபட்டால் தான் இந்தியா வையும் இந்திய மக்களையும் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்துள்ள எதிர்க்கட்சிகள் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை மண்ணைக் கவ்வச்செய்ய வைப்பது உறுதி. எனவே பாட்னா வில் தொடங்கியுள்ள ஒற்றுமை பயணம் அடுத் தாண்டு மே மாதம் மதச்சார்பற்ற சக்திகளின் அரசு மத்தியில் அமையும் வரை ஓயக்கூடாது. இந்தியாவில் பாசிச - எதேச்சதிகார அரசு வீழ்த்தப் பட்டது; மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட்டது என்ற நல்ல செய்தியை   உலகிற்குச் சொல்வதாக இந்தப் பயணம் அமைய வேண்டும்.