இந்தியா மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்ப டையில் அமைக்கப்பட்ட ஒரு குடியரசு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி 3, பிரிவு 19 (1) (a), அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பேச்சு ரிமையையும், தான் விரும்பும் கருத்தை வெளிப் படுத்தும், பரப்புரை செய்யும் உரிமையையும் உறுதி செய்துள்ளது. அரசியலமைப்பு முகவுரையும், இதைத்தான் சுதந்திரம் (liberty) என்று குறிப்பிடுகிறது.
ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கருத்துச் சுதந்திரம் முன்னெப்போதும் இல்லாத அள விற்கு தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கி றது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அனை த்து அடக்குமுறைகளையும், இப்போது வரை, தேசப் பாதுகாப்பு என்ற பெயரிலேயே மோடி அரசு செய்து வருகிறது.
ஜி-20 உச்சி மாநாடு சம்பந்தமாக மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து வி-20 (We20- அதாவது நாம்- 20) என்ற தலைப்பின் கீழ் ஒரு கருத்தரங்கத்தை குடிமக்கள் அமைப்புகளை இணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைத்திருந்தது. இந்த கருத்தரங்கை, காவல்துறையை அனுப்பி மோடி அரசு தடுத் துள்ளது. தோழர் சுர்ஜித் பவனிற்கு உள்ளேயே காவல்துறை புகுந்துள்ளது.
காவல்துறையினரின் முறையான அனுமதி யைப் பெறவில்லை என்று கூறி, இந்த சீர்குலைவு வேலையைச் செய்திருக்கின்றனர். கட்சி அலு வலகங்களில் இத்தகைய கூட்டங்களை அல்லது கருத்தரங்கங்களை நடத்துவதற்கு எவ்விதமான காவல்துறையினரின் அனுமதியும் எந்தக்காலத்திலும் தேவைப்பட்டதில்லை. காவல்துறை அனுமதியை பெற்றுக்கொண்டா, தில்லி பாஜக அலுவலகத்தில் ஒவ்வொரு கூட் டத்தையும் நடத்துகிறார்கள்? அரசுக்கு எதிராக இயக்கங்களை, மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கு வதற்கான முயற்சி அன்றி, இதில் வேறொன்று மில்லை.
சுர்ஜித் பவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமானது. அங்கு என்ன தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவது என்பதை ஆளும் பாஜக அரசு முடிவு செய்ய முடியாது. இதனை சரியாகவே குறிப்பிட்டு, தில்லி காவல் துறையினரின் இந்த நடவடிக்கை தான்தோன் றித்தனமானது (arbitrary action) என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளது. மோடி அரசாங்கம், தலைநகர் தில்லியில் விவாதங்கள் மற்றும் கருத்தரங்கங் கள் நடத்துவதற்கு குடிமக்களுக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமைகள் மீது தில்லிக் காவல்துறை யினர் மூலமாகத் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை கூட்டாக எதிர் கொள்வதென, எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்ட ணியை அமைத்தது முதலே பாஜகவுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்த அடக்குமுறை.