headlines

img

நீங்கள் ஓய்வது உறுதி!

இந்தியாவின் லட்சியக் கனவுகள் நனவாகும் வரை ஓய்வெடுக்க மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சி சார்பில் ஞாயிறன்று தில்லியில் நடைபெற்ற சர்வ தேச மாநாட்டில் பேசும் போது கூறியுள்ளார்.

 சுதந்திர இந்தியாவின் லட்சியங்கள், உன்ன தங்கள், மாண்புகள் அனைத்தையும் தகர்க்கிற வேலையைச் செய்து கொண்டு, விடுதலைப் போ ராட்டத்தின்  விழுமியங்களை பன்மைத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை சிதைத்து ஆர்எஸ்எஸ்- சின் கெடு நோக்கங்களான இந்துராஷ்டிரம், வரு ணாசிரமத்தை திணிக்கும் மனு ஸ்மிருதி ஆகிய வற்றை கொண்டு வரத் துடித்துக் கொண்டு இப்படிப் பேச மோடியால் தான் முடியும்.

அரசியல் சட்டத்தின் முகப்புரையில் இருக்கும் மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய வற்றை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இந்துத்துவா எண்ணம் கொண்டவர்களை வழக்குத் தொடுக்கச் செய்ததும் அதன் ஒரு பகுதி தானே. மதச்சார்பின்மை தான் அரசியல மைப்பின் கட்டமைப்பு என்று பொட்டில் அடித் தாற் போல் நீதிமன்றம் கூறியிருப்பது நாட்டுக்கு நல்ல காலம்.

எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் ஓர் விலை என்று மகாகவி பாரதி பாடியதையே அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத் தில் எதிரொலித்தார். ஆனால் சோசலிசம் என்பது நாட்டின் அனைத்து வளங்களும் வாய்ப்புகளும்  அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் பங்கிட்டு வழங்கப்பட வேண்டும் என்பது தான் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதற்கு மாறாகத் தானே பாஜக கூட்டணி அரசு நடந்து கொண்டி ருக்கிறது. ஆர்எஸ்எஸ்சின் உபாசகரான அதானி யை இந்தியாவின் முதல் பெரும் பணக்காரராக ஆக்குவது; உலகப் பணக்காரர்களில் முதல் 10  இடத்துக்கு முன்னேற்றுவது என்று தானே பணி யாற்றிக் கொண்டிருக்கிறது.

சமத்துவத்தை நோக்கிய எந்த முன்னெடுப் பும் இந்துத்துவா கூட்டத்துக்கு எட்டிக்காயாக கசக்கவே செய்கிறது. அதனால் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவும் அதற்கு ஏற்றாற்போல் ஒரே நாடு ஒரு தேர்தல் என்று கூறி ஜனாதிபதி ஆட்சி முறைக்கு வழி ஏற்படுத்தவும் முனைகிறது. இந்த நிலையில் தான் மோடி இந்தியாவின் கனவுகள் நனவாகும் வரை ஓய மாட்டேன் என்று பேசி புல்லரிக்கச் செய்கிறார். 

இந்துத்துவாவின் கனவுகளும் இந்தியாவின் கனவுகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை. அத னால் கடந்த தேர்தலில் பாஜகவின் தனிப் பெரும் பான்மையைப் பறித்து வாக்களித்தனர் மக்கள். உலகின் பிரசித்தி பெற்ற, நான் ஒரு கனவு காண்கி றேன் என்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போல மோடியும் பேசுகிறார். ஆனால் அவரது கனவு சமத்துவ கனவு; இவரது கனவோ அதற்கு எதிரா னது. சாதி பேதம் கூறி மேல் கீழ் என வர்ணமும் வர்க்கமும் ஆக இந்திய சமூகத்தைக் கூறு போடும் உங்களது கனவு நிறைவேறாது. ஆனால் உங்களை மக்கள் ஓய்வெடுக்க வைப்பது உறுதி.