headlines

img

நலம் விளைக்கும் நல்ல அணுகுமுறை

தமிழகத்தில் இயற்கை எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மக்களின் கருத்துக் களைக் கேட்டு அதன்படிதான் அரசு செயல் படும் என்றும் சட்டப் பேரவையில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திங்களன்று தெரிவித்திருக்கும் கருத்து தமிழ்நாட்டு விவசாயி களுக்கு நலம் விளைவிக்கும் நல்ல கருத்து. இது முந்தைய ஆட்சியாளர்களின் அடாவடியான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை. இது தொடரட்டும்.

கடந்த ஆட்சியின் போது தமிழகத்தில் விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்தல், எட்டு வழிச்சாலை அமைத்தல், இயற்கை எரிவாயுக் குழாய் பதித்தல், மீத்தேன்- ஷேல் கேஸ் எடுத்தல் என பல்வேறு வகையிலும் விவசாயிகளின் வாழ்வா தாரத்தைப் பாதித்திடும், சுற்றுச்சூழலை மாசு படுத்திடும், தமிழ்நாட்டின் விவசாயத்தையே பாழ் படுத்திடும் திட்டங்களை பிடிவாதமாக நடை முறைப்படுத்தும் கடுமையான அணுகுமுறையே கடைப்பிடிக்கப்பட்டது.

இதற்கு எதிராக காவிரி டெல்டா மாவட்டங்க ளில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பரந்துபட்ட அள விலான போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அதன் பிறகே, ஒன்றிய பாஜக அரசின் கட்டளையை அப்படியே அடிபிசகாமல் நிறைவேற்றத் துடித்த வர்களின் அணுகுமுறையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. அதுவும் கூட தேர்தலை மனதில் கொண்டு ஏற்பட்டது.

காவிரி டெல்டாவை விவசாயப் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து மசோதாவை கொண்டு வந்தார்கள். ஆயினும் எட்டுவழிச்சாலை, உயர்மின் கோபுரம் அமைத்தல் ஆகியவற்றைத் தொடரவே செய்தார்கள். அதற்கெதிராக வடக்கு, மேற்கு மாவட்டங்களில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் விளைவை அதிமுக கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அறுவடை செய்தது; மக்கள் நல்ல பாடம் புகட்டி னார்கள்.

தற்போது கேரளாவிலிருந்து கர்நாடகத்திற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக விளை நிலங்களில் அளவீடு செய்யும் வேலை  நடப்பதை எதிர்த்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கி றார்கள். ஒரு விவசாயி தனது உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார். 

இதையடுத்து தமிழக அரசு கெயில் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடையவர்களின்  கூட்டத்தை நடத்தி அதில், நெடுஞ்சாலை ஓரங்க ளில் எரிவாயு குழாய் பதிக்கலாம் என்று முடிவு  செய்திருப்பது விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்க்கும் செயல். விளைநிலங்களில் பயிர்கள் தான் விளைந்து சாய வேண்டும். விவசாயிகளின் உயிர் கள் மடிந்து சாயக்கூடாது. மக்களின் கருத்துக்க ளைக் கேட்டறிந்து அவர்களின் முழு ஒத்துழைப் புடன் தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற அமைச்சரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. இந்த அரசு விவசாயிகளின்  தோழனாக விளங்கட்டும்!