headlines

img

கூட்டாட்சி முறைக்கு விடப்பட்ட சவால்

கூட்டாட்சி முறைக்கு விடப்பட்ட சவால்

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்த ஒன்றிய பாஜக அரசு, அம்மாநி லத்தை இரண்டாக பிளந்து யூனியன் பிரதேச மாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவத்தையும் குழிதோண்டி புதைத்தது. இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  யூனியன் பிரதேச அரசை அழைக்காமலேயே மே 29 ஆம் தேதி ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்முவில் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல்  நடந்த நிலையில் ஜூலை 3 முதல் காஷ்மீரில் தொடங்க விருக்கும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகளை அதில் அவர் ஆய்வு செய்தார்.  இந்த கூட்டத்திற்கு  முதல்வர் உமர் அப்துல்லாவை அழைக்கவில்லை. 

பஹல்காம் தாக்குதல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளுநர் சின்ஹா தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையையும் ஒன்றிய அரசின் உளவுத்துறை தோல்வியையும் அம்பலப்படுத்தியது. 

2019 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க ஒன்றிய அரசு பயன்படுத்திய ஜம்மு-காஷ்மீர்  மறுசீரமைப்புச் சட்டத்தில், சட்டம் - ஒழுங்கு துணைநிலை ஆளுநரின் அதிகாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக் கப்பட்ட அரசாங்கத்திற்கு இந்த விவகாரத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை. இதன் தொடர்ச்சி யாக அமித் ஷாவும்  துணை நிலை ஆளுநரும் அடிக்கடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசை அழைக்காததைப் பார்க்கும் போது, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஓரங்கட்டி நேரடியாக ஆட்சி நடத்த  திட்டமிடுவதாக சந்தே கப்பட வேண்டியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பான விஷ யங்களில் உமர் அப்துல்லா தலைமையிலான அரசாங்கத்தையும் கூட்டத்திற்கு அழைத்தி ருக்க வேண்டும். “ஒன்றிய அரசும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் யாத்ரீகர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும்” என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே கலந்தாலோசனை கூட்டத்திற்கு உமர் அப்துல்லா  அரசை அழைக்காதது, அதிகார ஆணவத்தின் உச்சம். 

 கடந்த மாதம், ஸ்ரீநகரில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் பாதுகாப்புப் பிரச்சனை விவா தத்திற்கு வந்தபோது, ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளரையும் காவல்துறைதலைமை இயக் குநரையும் கூட ஒன்றிய அரசு அழைக்க வில்லை. இதனால் கோபமடைந்த முதல்வர் அப்துல்லா கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இப்படி ஒன்றிய அரசும் ஆளுநர் மாளிகையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடப்பட்ட சவால் ஆகும்.