headlines

img

பாஜக வளரவும் இல்லை தாமரை மலரவும் இல்லை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்தக் கூட்டணி குறைவான இடங்கள் பெற்றிருந்த பகுதிகளில் கூட இந்த முறை பெரும் எண்ணிக்கையில் வெற்றிபெற்றுள் ளது. கொங்கு பகுதி உட்பட அனைத்து மாவட்டங் களிலும் இந்த அணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 

பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிலி ருந்த அதிமுக உள்ளாட்சித் தேர்தலையே நடத்த வில்லை. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினால் ஆக்கப்பூர்வ பிரச்சாரம் எதையும் மேற்கொள்ள முடியவில்லை. மாறாக பத்தாண்டு காலம் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிய நிலையில், எட்டு மாத காலமே ஆட்சிப் பொறுப்பிலிருந்த திமுக ஏன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையே கிளிப் பிள்ளைபோல எடப்பாடி  பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியதை மக்கள் ஏற்க வில்லை. மேலும் பாஜகவுக்கு தொடர்ந்து பல்லக்கு தூக்கியதன் விளைவையும் அதிமுக இந்தத் தேர்தலிலும் சந்திக்க நேர்ந்துள்ளது. 

மறுபுறத்தில் தனித்துப் போட்டி என்று களமிறங்கிய பாஜகவையும் தமிழக மக்கள் வழக்கம்போல புறக்கணித்துள்ளனர். ஆனால் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக தலை வர்கள் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற பாணியில், பாஜகதான் தமிழ கத்தில் மூன்றாவது பெரிய சக்தி என்று மார்தட்டிக் கொள்வது கேலிக்கூத்தானது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு தங்களுடைய வழக்கமான பாணியில் திருக்காட்டுப்பள்ளி மாணவி தற்கொலையை மதமாற்றத்தோடு முடிச்சுப் போட்டு அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினர். இதன் மூலம் வாக்கா ளர்களை மதரீதியாக பிளவுபடுத்த முயன்றனர். ஆனால் அவர்களது இந்த உத்தி  எடுபடவில்லை. மேலும் கர்நாடகத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சங் பரிவாரத்தால் கிளப்பிவிடப்பட்ட ஹிஜாப் விவகாரத்தையும் பயன்படுத்த முயன்றனர். ஆனால் தமிழகம் என்றென்றும் மதநல்லிணக்கத்தின் பக்கமே என்பதை மக்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர்.

ஆனாலும் பாஜக ஆதரவு ஊடகங்கள் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த சொற்ப வாக்கு களை ஊதிப்பெரிதாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள் ளன. அதிக அளவில் டெபாசிட் இழந்த கட்சி என்ற வகையில் பாஜகவுக்கு வேண்டுமானால் மூன்றாம் இடம் அல்ல, முதலிடமே கொடுக்க லாம். மதுரை, திண்டுக்கல், சிவகாசி ஆகிய மாந கராட்சி வார்டுகளில் அதிக இடங்களில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது. 10 மாவட்டங்களில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடிய வில்லை. கொங்கு பகுதி எங்களது கோட்டை என்று கொக்கரித்த நிலையில், கோவையில் 82 வார்டு களில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது. சென்னை யில் 200 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலி லும் தமிழகம் பாஜகவை தோல்வி பள்ளத்தாக்கில் தான் தள்ளியுள்ளது என்பதுதான் உண்மை.