headlines

img

கீழடி அகழ்வாய்வும், கீழறுப்பு வேலைகளும்

கீழடி அகழ்வாய்வும்,  கீழறுப்பு வேலைகளும்

கீழடி அகழ்வராய்ச்சி தொடர்பான அறிக்கை யை வெளியிட ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து  வருகிறது. சென்னையில் பாஜக அலுவலகத்தில் பேட்டியளித்த மத்திய கலாச்சாரத் துறை அமைச் சர் கஜேந்திர சிங் செகாவத், கீழடி அகழ்வராய்ச்சி யானது அறிவியல்பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியாக இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. இன்னமும் நிறைய சான்றுகள் தேவைப்படுகிறது என்று நீட்டி முழக்கியுள்ளார்.

இது அரசியல்வாதிகள் முடிவு செய்யும் விசயம் அல்ல என்று பாஜக அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு அவர் பேட்டியளிக்கிறார். அதிலும் மோடி அரசின் 11 ஆண்டு கால ஆட்சிக்காலச் சாதனை என்று இல்லாததையும், பொல்லாத தையும் புனைந்துரைத்து சாதனை மலரை வெளி யிடும் நிகழ்ச்சியில்  இவ்வாறு பேட்டியளித்துள் ளார் அவர். மோடி ஆட்சியின் 11 ஆண்டு கால சாதனையில் கீழடி அகழ்வாய்வு முடிவில் மண் அள்ளிப் போட துடிப்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். 

பாஜகவினர் விரும்புகிற வகையில் கீழடி அகழ்வாய்வு முடிவு அமையவில்லை என்பது தான் அவர்களுக்கு இருக்கிற ஆத்திரம், புராணக் கதைகளை வரலாறு என்று மக்களிடம் திணிக்க முயல்கிறார்கள் சங் பரிவாரத்தினர். ஆனால் சங்க காலம் துவங்கி தமிழ் இலக்கியம் விவரிக்கும் வாழ்வியல்  வர்ணிப்புகளுக்கான பொருண்மைச் சான்றுகள் தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாய் வில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனால் தான் கீழடி ஆய்வை வெளிப்படுத்த விடாமலும், எழுதவிடாமலும் துவக்கத்திலிருந்தே முட்டுக் கட்டை போட்டது மோடி அரசு. 

இந்த ஆய்வில் அறிவியல்பூர்வமாகவும், அர்ப்பணிப்போடும் செயல்பட்ட ஒன்றிய தொல்லி யல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ண னை வேறு மாநிலத்திற்கு தூக்கியடித்தார்கள். அவருக்கு அடுத்து வந்த ஸ்ரீராம் என்ற அதி காரியை கீழடியில் ஒன்றுமே இல்லை என்று கூற வைத்து ஒன்றிய அகழ்வாய்வுத்துறை விலகிக் கொண்டது.

ஏற்கெனவே அமர்நாத் ராமகிருஷ்ணன் நடத்திய ஆய்வு முடிவுகளைக்கூட தற்போது  வெளியிட விடாமல் முடக்குகிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய வரலாற்றுக்கு செய்யப்படும் மிகப்பெரும் துரோகமாகும். அறிவியல்பூர்வமாக அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை எழுதவில்லை என்ப வர்கள் அவர்கள் கூறும் சரஸ்வதி நதி நாகரிகம் துவங்கி, சமஸ்கிருதத்திலிருந்துதான் எல்லா மொழிகளும் தோன்றின என்ற உருட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரத்தை தந்திருக்கிறார்களா? ஏதா வது கேள்வி கேட்டால் மனதை புண்படுத்துவதாக வும், நம்பிக்கையை கேள்விக் கேட்கக்கூடாது என்றும் பம்மாத்து செய்கிறார்கள். இந்திய வர லாற்றை ஒற்றைத் தன்மையோடு எழுத முயலும் அவர்களுக்கு பன்முகத்தன்மையை பேசும் கீழடி இடையூறாக இருப்பதால்தான் இத்தகைய கீழ றுப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் வர லாற்றை மோடிகள் தீர்மானிக்க முடியாது. அது முட்டி மோதி வெளியே வந்தே தீரும்.