headlines

img

கருவறை தீண்டாமையை தடுக்கும் தீர்ப்பு!

அர்ச்சகர்கள் நியமனத்தின் போது பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட சாதியினரை மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும் என உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற சமூக நீதி கோட்பாட்டுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதாக இந்த தீர்ப்பு அமைந் துள்ளது. மேலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு மேற் கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதா கவும், இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

சேலம் சுகனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப கோவில் நிர்வாகம் அறிவிப்பாணை வெளி யிட்டதை எதிர்த்து அந்த கோவிலில் பரம்பரை  அர்ச்சகராக பணியாற்றுபவர் வழக்கு தொடுத்தார். ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்பது அவரது தரப்பு வாதமாக இருந்தது. 

எந்தவொரு ஆகமத்திலும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே அல்லது பரம்பரையாக அர்ச்சகர்களாக உள்ளவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என்று இல்லை. அப்படியே இருந்தாலும் அரசி யல் சட்டப்படி அனைவரும் சமம் என்றாகி விட்ட நிலையில், அது செல்லத்தக்கது அல்ல. 

ஆனாலும் இல்லாத ஒன்றை சொல்லி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற கோட்பாட்டிற்கு குந்தகம் விளைவித்து வந்த னர். இதைத்தான் உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு அனைத்து சாதி யினரையும் அர்ச்சகராக்குவதற்கு தடையாக இருந்த நிலையில், ஆனந்த வெங்கடேஷ் தலைமையிலான அமர்வாயம்  சாதி அடிப்ப டையில் மட்டுமே அர்ச்சகர் நியமனம் என்பதை நிராகரித்துள்ளது. 

உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப் படையில் ஆகம கோவில்களை கண்டறிய 2022இல் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரை வரும்வரை பரம்பரை அர்ச்சகர்கள் முறை தொடர வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை உயர்நீதிமன்றம் நிரா கரித்துள்ளது.

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது இதற்கான சட்டம் கொண்டு வந்த போதும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப் பட்டன. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசு அனைத்து கோவில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கியுள்ளது. தமிழகத்திலும் இது முழுமையாக நடைபெற இந்த தீர்ப்பு உதவும். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளிலும் தமிழக அரசு தொடர்ந்து நடத்துவதோடு இதில் பயின்ற வர்களை காலிப் பணியிடங்களில் நியமிக்க வேண்டும். சமூக நீதிப் பயணத்தில் இது முக்கிய மானதாக இருக்கும்.