headlines

img

திக்கெட்டும் ஒலிக்கட்டும் கேரள இடதுசாரி மாடல்!-கே.பி.பெருமாள்

சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக 1957இல் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அர சாங்கம் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமை யில் ஆட்சி அமைத்தது. அந்த ஆட்சியின் தொடர்ச்சி யாக தற்போதும் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வருகிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம், பெண்கள் மேம்பாடு, சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட வைகளில் கேரள மாநிலம் இந்தியாவிற்கே வழி காட்டியாகத் திகழ்ந்து வருகிறது என்பதை நாடறி யும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

கல்வி

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஒ) நடத்திய ஆய்வில், நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா 96.2 சதவீதத்துடன் முத லிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 77.7 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 84.7 சதவீதம், பெண்கள் 70.3 சதவீதம் பேர். கிராமப் புறங்களில் 73.5 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 87.7 சதவீத பேரும், கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். நாட்டிலுள்ள முதல் 50 கல்லூரிகளில் கேரளாவில் 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த எண்ணிக்கை தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு என்ற (NIRF) 2020இன் படி உள்ளது. 2001-2011 கால கட்டத்தில் கேரளாவில் ஆண்களின் கல்வியறிவு 94 சதவீதத்திலிருந்து 97 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே போன்று அதே கால கட்டத்தில் பெண்களின் கல்வியறிவு 87 சத வீதத்திலிருந்து 94 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சுகாதாரம்

கேரளாவில் சுகாதாரம் கிட்டத்தட்ட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது. சுகாதாரத் துறையை மேம்படுத்த மாநில அரசு முன்னெப்போ தும் இல்லாத சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. திரட்டப்பட்ட வருவாயில் 40 சதவீதத்தை கிராமப்புறங்க ளுக்கு வழங்க முடிவு செய்தது. இவை கேரளாவில் உள்ள கிராமப்புறங்களில் சுகாதார அமைப்பை வலு வாக உருவாக்க உதவியது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 3 மருத்துவர்கள், 4 செவிலி யர்கள், 1 பல் மருத்துவர், 1 மருந்தாளுநர் மற்றும் 1  லேப் டெக்னிசியன் உள்ளனர். இங்கு எல்லா நோய்க ளுக்கும் இலவசமாக வைத்தியம் செய்யப்படுகிறது. சில ஆய்வுகளுக்கு சிறிய அளவில் கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. 

வேளாண்மை 

இந்தியாவின் மசாலாத் தோட்டம் என்று கேரளா அழைக்கப்படுகிறது. வயநாடு, இடுக்கி மாவட்டங்க ளில் அதிக அளவில் மசாலாப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த தேங்காய்  உற்பத்தியில் கேரளாவில் 45 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலச்சீர்திருத்தம் கேரளாவின் நிலம் வைத்திருக்கும் முறையில் பெரிய மாற்றத்தை ஏற் படுத்தியுள்ளது. மாநிலத்தில் விவசாய நிலங்கள் 55 சதவீதமாகவும், வன நிலம் 28 சதவீதமாகவும், 11 சதவீத நிலம் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கா கவும் உள்ளன.

இந்தியாவின் ஏற்றுமதியில் கேரளா பெரும் பங்களிப்பை வழங்குகிறது. ரப்பர் உற்பத்தியில் 91 சதவீதம் மற்றும் மசாலா உற்பத்தியில் 96 சதவீ தத்திற்கும் அதிகமாக உள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் ஆண்டு மொத்த மாநில உற்பத்தியான 9.77 லட்சம் கோடியை இணைத்து, கேரளாவின் பொரு ளாதாரம் இந்தியாவில் 9ஆவது இடத்தில் உள்ளது. 2017ஆம் ஆண்டில் கேரளாவின் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு நாட்டின் மொத்த ஜிடிபியில் 10.58 சதவீதம் ஆகும். தேங்காய், மசாலா, காபி உற்பத்தியில் கேரளா முதலிடத்தில் உள்ளது.

 விவசாயிகளை பாதுகாப்பதில் நாட்டிற்கே முன்னோடியாக கேரள மாநிலம் உள்ளது. நெல் குவிண்டாலுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஆதார விலை 2023-24ஆம் ஆண்டுக்கு ரூ.2183. 2024-25ஆம் ஆண்டுக்கு ரூ.2300. ஆனால் கேரள அரசு அறிவித்த விலை நெல் குவிண்டாலுக்கு 2022-23ஆம்  ஆண்டுக்கு ரூ.2820 ஆக உள்ளது. நாட்டிலேயே நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு அதிகம் கொள் முதல் விலை நிர்ணயித்த மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 16 வகை யான காய்கறிகளின் விலையை முதன் முறையாக அரசே நிர்ணயம் செய்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளின் விலையில் இருந்து 20 சதவீதம் அதிகமாகக் கணக்கிட்டு விற்பனை செய்யப் படுகிறது. சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்தாலும் கூட அதற்கு கூடுதலான விலையில் விவ சாயிகளிடமிருந்து காய்கறிகளை அரசே கொள்முதல் செய்கிறது. இத்திட்டம் நாட்டிற்கே வழிகாட்டியாக கேரள அரசு செயல்படுத்தி வருகிறது.

பெண்கள் முன்னேற்றம்

கேரளாவில் பெண்கள் முன்னேற்றம் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. பெண்கள் எழுத்தறி வில் கேரளாவில் 97.4 சதவீதமாகவும், தமிழகத்தில் 84 சதவீதமாகும். அகில இந்திய சராசரி 71.5 சதவீதம்  ஆகும். குறைந்தபட்சம் பத்தாண்டுகள் பள்ளிக்கல்வி பெற்ற பெண்கள் கேரளாவில் 77 சதவீதமாகும். தமிழ கத்தில் 56.6 சதவீதம், அகில இந்திய சராசரி 41 சதவீதமாகும்.

பெண்கள் உடல் நலம் குறித்த ஒரு  முக்கிய அம்ச மாக ரத்தசோகை பாதிப்பு 15 வயது முதல் 49 வயது வரம்புகளில் வரும் பெண்களில் கேரளாவில் 36.3 சத வீதமாக உள்ளது. இது மற்ற மாநிலங்களைக் காட்டி லும் குறைவாகும். அகில இந்திய சராசரி 60.2 சதவீத மாகும். தமிழகத்தில் 53.4 சதவீதமாக உள்ளது.  அகில இந்திய அளவில் பெண்களின் இணைய தள பயன்பாடு 33.3 சதவீதம், கேரளாவில் 61.1 சதவீதம், தமிழகத்தில் 46.9 சதவீதமாகும். சுய அலைபேசி பயன்பாடு இந்திய அளவில் பெண்கள் சொந்தமாக அலைபேசி வைத்திருப்பவர்கள் 54 சதவீதம் பேர் ஆகும். கேரளாவில் 86.6 சதவீதமாகும். தமிழ்நாட்டில் 74.6 சதவீதம் பெண்களும் சொந்தமாக அலைபேசி வைத்துள்ளனர். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்க ளில் அகில இந்திய சராசரி (2019-21) 78.6 சதவீதம். கேர ளாவில் பெண்களின் வங்கிக் கணக்கு 78.5 சதவீதம்,  தமிழ்நாட்டில் 92.2 சதவீதம் பெண்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். தாய், சேய் நலத்திலும் பொது சுகாதாரத்திலும் கேரளா அகில இந்திய அளவில் முதலி டத்தில் உள்ளது. அதே போல் கிராம, நகர இடைவெளி மிகக்குறைவு என்று தேசிய குடும்ப நல ஆய்வின் (NFHS) தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒன்றிய அரசின் நெருக்கடி

இடது ஜனநாயக முன்னணி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரளத்தில் ஆட்சிக்கு வந்த வுடன் இரவு நேரங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வது, பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பின் முன்னுரையை காலையில் நடைபெறும் பிராத்த னைக் கூட்டங்களில் வாசிப்பதை கட்டாயமாக்கியது. அதே போல் ஒன்றிய அரசு இறைச்சிக்காக மாடுகளை  விற்பனை செய்வதற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். 

அதில் “ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் அதிக புரதச் சத்தைத் தரும் மாட்டிறைச்சியை தடை செய்யக் கூடாது”. இது எளிய மக்களுக்கு கிடைக்கும் உணவைத் தடுப்பது என்பது மட்டுமல்ல, தோல் தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்படும். இந்தியாவில் 25 லட்சம் பேர் தோல் தொழிற் சாலையை சார்ந்திருக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள னர். அவர்களின் பொருளாதாரத்தை இது பெரிதும் பாதிக்கும். தோல் பொருள்கள் ஏற்றுமதியில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். 

அதே போல் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பதி லும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் முன்னணி யில் இருக்கிறார். இந்த இரண்டு சட்டங்களையும் எதிர்க்கும் மாநிலங்களை ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார். குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கேரளச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரதமரிடம் ரயில் பெட்டி தொழிற் சாலை அமைப்பது சம்பந்தமான கோரிக்கை மனுக் கொடுக்க முதலமைச்சர் பினராயி விஜயன் தில்லி சென்றிருக்கும் போது பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.

2018இல் பெரும் வெள்ளம் கேரளாவில் ஏற்பட்ட போது தேசியப் பேரிடராக ஒன்றிய அரசு அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு செவிசாய்க்க வில்லை. கேரள வெள்ள பாதிப்புக்கு சவூதி அரேபியா நிவாரண நிதி வழங்க முன் வந்தது. ஆனால் ஒன்றிய அரசு அனுமதி தராததால் அந்த நிவாரண நிதியை கேரள அரசால் பெறமுடியாமல் போனது குறிப்பிடத் தக்கது. 

தலைநகர் தில்லியில் குடியரசு தின அணி வகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. அந்த  அணிவகுப்பு பட்டியலில் கேரள மாநிலத்தின் பெயர் இடம் பெறாமல் இருந்தது. கேரளாவில் உடனடி நிதி நெருக்கடியை தவிர்க்க ஒரே நேரத்தில் 5000 கோடியை மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறி யதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசுக்கும் கேரளாவுக்கும் இடையே ஒரு சட்டப் போராட்டம் நடந்தது. 

அதில் ஒன்றிய அரசு வழங்கும் தொகை, ஓய்வூதி யம் மற்றும் சம்பளம் உள்ளிட்ட கேரளாவின் அடிப்படை  நிதிக் கடமைகளை நிறைவேற்ற போதுமானதாக இருக்காது. ரூ.50,000 கோடி அளவுக்கு கடன் பெற ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேரள அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த விசயத்தில் கேரள அரசு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரி வித்தது. இரண்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

மதவெறி ஆபத்து

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பரிவார அமைப்பு கள் நாட்டில் உள்ள பன்முகத்தன்மையை அழித்து மத அடிப்படையில் தேசத்தை உருவாக்க முயற்சிக் கின்றன. இந்தியர்களில் ஒரு பிரிவினரை தேச விரோதி களாகச் சித்தரிப்பதன் மூலம் வகுப்புவாத மோதல்கள் நாட்டில் நடைபெற்று வருகின்றன. மதம், சாதி என பிரிந்து கிடந்தாலும் அனைவருக்கும் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இது மாறி வருகிறது. சிறுபான்மை சமூகத்தி னரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 18 சதவீதம் பேர், இஸ்லாமியர்கள் 26 சதவீதம் பேர், இந்துக்கள் 55 சதவீதம் பேர் உள்ளனர். ‘கேரளா ஸ்டோரி’ என்ற சினிமா மூலம் மக்களிடம் வகுப்புவாத மோதலை ஏற்படுத்த திட்டமிட்டு ட்ரெய்லர் ஒளிபரப்பினர். அதில் 32 ஆயிரம் பெண்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற கருத்து போலியானது. இவ்வாறு கேரளாவில் வாழும் மக்களை மதரீதியாக பிளவுபடுத்த தவறான பிரச்சாரங்களை செய்கின்றனர் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். அதே போல் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல அப்பாவி இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

கேரள மாநிலம் கடவுளின் தேசம் என அழைக்கப் படுகிறது. அந்த தேசத்தில் வாழும் மக்களை நிம்மதி யாக வாழ விடாமல், அங்கு ஆட்சி நடத்தி வரும் இடது  ஜனநாயக முன்னணி அரசை வீழ்த்த வேண்டுமென்று  பாஜக, ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார அமைப்புகள் பல்வேறு அஜண்டாக்களை செயல்படுத்தி வரு கின்றன. மாநில அரசுக்கு எதிராக ஆளுநரைப் பயன்படுத்துவது மற்றும் மத்திய புலனாய்வு முகமை களை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருவதை நாம் பார்க்க முடிகிறது. இதற்கும் மேலாக இடது ஜனநாயக முன்னணி அரசை வீழ்த்த மாநிலத்திற்கு வழங்க  வேண்டிய நிதி பங்கினை ஒன்றிய அரசு கொடுக்கா மல் பாரபட்ச அணுகுமுறையை கடைப்பிடித்து வரு கிறது. எப்படியாவது கேரள அரசை வீழ்த்த வேண்டும் என்று செயல்பட்டு வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளின் நரவேட்டைக்கு எதிராக கேரள அரசும், மக்களும் வீரத்துடன் போராடி வரு கிறார்கள்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்பு களுக்கு எதிராகப் போராடிக் கொண்டே மக்கள் செல்வாக்குடன் பல்வேறு கட்டமைப்புகளை உரு வாக்கி கல்வி, சுகாதாரம், வேளாண்மை, பெண்கள் முன்னேற்றத்தில் நாட்டிற்கே வழிகாட்டி தொடர்ந்து இரண்டாவது முறையாக கேரளாவில் ஆட்சி செய்து வரும் இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி யையும், கேரள மக்களையும் பாதுகாப்பதற்காகவும், அவர்களுடைய வீரம் செறிந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் கேரளாவை பாதுகாத்திட இந்தியா முழுவதும் “கேரள ஒருமைப்பாட்டு தினத்தை” டிசம்பர் 11 முதல் 21 வரை  கடைப்பிடிக்கின்றன. நாடு முழுவதும் மூன்று அமைப்பு களும் இணைந்து வெகுமக்களின் பங்கேற்போடு கேரள மக்களுக்கும், இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் ஆதரவாக குரல் எழுப்புகிறார்கள். அந்தக் குரல் கோடிக்கணக்கான மக்களின் குரலாக எட்டுத் திசைகளிலும் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். அந்த பெரும் சங்கொலியில் அனைவரும் பங்கேற் போம். கேரளாவை பாதுகாப்போம், இடதுசாரி அரசை பலப்படுத்துவோம்.

கே.பி.பெருமாள்

கட்டுரையாளர் : தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில  பொருளாளர்