ஏஐ- பொதுச் சொத்தாக மாறுவதே தீர்வு
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படை நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? மனித குல முன்னேற்றமா அல்லது ஒரு சிலரின் லாபமா? இந்தக் கேள்வி இன்று செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பின்ன ணியில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏஐ தொழில் நுட்ப மாற்றத்தால் 2024- 25 ஆம் நிதியாண்டில்மட்டும் 14 சதவிகிதம் பணியா ளர்கள் வேலையிழந்துள்ளனர் என்கின்றன புள்ளிவிபரங்கள். உலகளவில் 2025க்குள் ஏஐ காரணமாக 75 முதல் 85 மில்லியன் (7.5–8.5 கோடி) வேலையிழப்புகள் ஏற்படும் என உலக பொருளா தார மன்றம் நெக்ஸ்போர்டு பல்கலை. ஆகி யவை கணித்துள்ளன.
ஏஐ தொழில்நுட்பம் என்பது இன்று இரு வேறு பாதைகளில் பயணிக்கிறது. ஒன்று மனித நலனுக் காகவும், மற்றொன்று வணிக லாபத்திற்காகவும். இந்த இரு அணுகுமுறைகளும் முற்றிலும் வேறுபட்ட விளைவுகளை உருவாக்குகின்றன.
சோசலிச நாடுகளில் ஏஐ தொழில்நுட்பம் சமூ கத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது. கல்வி, சுகாதாரம், பொதுப் பணிகள், விவசாயம் போன்ற துறைகளில் மக்க ளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கம். இங்கே தொழில்நுட்பம் சமூகத் தின் சொத்து என்ற அடிப்படையில் அணுகப்படு கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்கள் சமூகம் முழுவதும் பரவும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. இங்கு தொழில்நுட்பம் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கருவி யாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மறுபுறம், முதலாளித்துவ நாடுகளில் ஏஐ தொ ழில்நுட்பம் முழுமையாக பெருநிறுவனங்களின் கைகளில் குவிந்துள்ளது. இங்கே தொழில்நுட் பத்தின் முதன்மை நோக்கம் லாப அதிகரிப்பு மட்டுமே. இந்த அணுகுமுறை பல்வேறு சமூக பிரச்சனைகளை உருவாக்குகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கூகிள், அமேசான், மைக்ரோ சாப்ட், மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் லாப அதிகரிப்பிற்காக மட்டுமே இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த கார்ப்ப ரேட் ஏகாதிபத்தியம் உழைக்கும் மக்களின் அறி வையும் தரவையும் கூட சுரண்டுகிறது.
லெனின் கூறியபடி, ஒரு “புரட்சிகர நிலைமை என்பது ஆளும் வர்க்கங்கள் பழைய விதத்தில் ஆட்சி செய்ய முடியாத நிலையும், அடிமைப்படுத் தப்பட்ட வர்க்கங்கள் பழைய விதத்தில் வாழ முடி யாத நிலையும் ஆகும்.” ஏஐ எனும் நவீன தொழில் நுட்பப் புரட்சியும் இந்த நிலையை நோக்கி நம்மை நகர்த்துகிறது. ஏஐ மூலம் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் போது, தொழிலாளர்கள் வேலை யிழக்கின்றனர். இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்கக்கூடிய நுகர்வோர் இல்லாத நிலை ஏற்படுகிறது.இது முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாட்டை கூர்மையாக்குகிறது.
வேலையின்மை மற்றும் அதிகரித்த ஏற்றத் தாழ்வு சமூக பதற்றத்தையும், அமைதியின்மை யையும் தூண்டும்.தொழில்நுட்பம் சிலரின் தனிச் சொத்தாக இல்லாமல், சமூகத்தின் பொதுச்சொத் தாக மாற்றப்பட வேண்டும். அதுவே எதிர்கால அமைதிக்கு வழிவகுக்கும்.