ஆண்: நடந்து நடந்து நான் நதிஆவேன்.
வளர்ந்து வளர்ந்து நான் வான்ஆவேன்.
இப்படி ஆவேன் என்றா லும்உனை
நினைத்து நினைத்து நான் நீஆவேன்!
பெண்: குழைந்து குழைந்து நான் கொடிஆவேன்.
சிதைந்து சிதைந்து நான் சிலை ஆவேன்.
இப்படி ஆவேன் என்றா லும்நான்
கனிந்து கனிந்து உன் கனி ஆவேன்!
(நடந்து)
ஆ: மழலை யாக நீதவழ
மரகதப் பச்சைப் புல்வெளி ஆவேன்!
பெ: மருந்தாய் எனக்கு நீ இருந்தால்
நோயாய்க் கூட நானே ஆவேன்!
ஆ: உன் இதழில்... புன்னகை ஆவேன்
பெ: உன் சிரசில்... ஒளிவட்டம் ஆவேன்.
ஆ: உன்கண் ணுக்கு கண்ணாவேன்.
பெ: மறுத்தால் நீ எனை
வெறுத்தால் நான்வெறும் மண்ணாவேன்!
(நடந்து)
பெ: உன்வாழ் வில்ஒரு துயர் வந்தால்
உன்கண் ணில்நான் கண்ணீர் ஆவேன்
ஆ: உன்தோல் விகளால் நீதுவண்டால்
ஓய்வாய் சாய தோளாய் ஆவேன்.
பெ: வெற்றியிலே...உனதுவில் ஆவேன்.
ஆ: வீழ்ச்சியிலே...ஆறுதல் ஆவேன்.
பெ: உன்சுமை தாங்கிக் கல்ஆவேன்.
ஆ: உன்இரு இதழில்
ஒருஇத ழாய் நான் உருவாவேன்!
(நடந்து)
பெ: தெய்வம் எனநீ எனைத்துதித்தால்
திருநீ றாய்உன் நெற்றியில் ஆவேன்
ஆ: பக்தன் எனநீ எனை நினைத்தால்
பாசுரம் ஆயிர மாய்நான் ஆவேன்.
பெ: உன் நினைவால்... நெருப்பாய் ஆவேன்
ஆ: உன் குதிகால்... செருப்பாய் ஆவேன்
பெ: உன் தூண் டில் அதில் புழுஆவேன்.
ஆ: என்தூண் டில்புழு
நீஎனில் நானே மீனாவேன்!
(நடந்து)