கடந்த நாட்கள்
மடங்கி வந்த அதிசயம் !
கிள்ளிப் பார்த்தோம்
அது உண்மை !
அள்ளிக் குழைத்து
குழைந்து போனோம்!
குழந்தையாய் ஆனோம் !
மூப்பின் ரேகைகள்
பலரிடத்தில்..
மாறாத புன்னகை
அனைவரிடத்தில் !
மங்கிய கண்கள்
பொங்கிய மகிழ்ச்சி !
மங்காத நினைவுகள் !
வாழ்ந்ததை... விழுமுன் பிடித்ததை
படித்ததை..
நினைவில் ருசித்தோம் !
அவரவர் அரும்புகளின்
அன்றைய அழகு கதை கூற...
பசுமையாகச் சிரித்தது
வெள்ளையேறிப் போன
மீசைகள் !
ஓரக்கண்ணால் பேசியதும்
ஒய்யார நடைகளை களியாக்கியதும்
சிரித்துச் சிரித்து
கண்கள் குளமாகின !
உடல் உருமாறும்..
நட்பு என்றும்
வளம் பெறும் !