தீவினை செய்ய தீயவர் அஞ்சார்
தீயவை செய்ய மேலோர் அஞ்சுவர்!
தீச்செயல் தீமையைத் தருவதால் என்றும்
தீயினும் கொடிதாய் அஞ்சுதல் வேண்டும்!
தம்மை வருத்துவோர் தனக்கும் தீயவை
தந்திடா அறிவே தலையான அறிவு!
நம்மை மறந்தும் கேட்டைச் செய்தால்
நமக்குக் கேட்டை அறமே எண்ணும்!
ஏழ்மை போக்கத் தீயவை செய்தால்
ஏழ்மை மிகுந்து வருந்துவான் என்றும்!
ஆழ்ந்த துன்பம் வருத்தா திருக்க
அழித்திடும் தீச்செயல் செய்யா திருக்க!
கொடிய பகையில் தப்ப முடியும்
கொடிய தீவினைப் பகையில் முடியா!
அடியின் நிழலாய் ஆற்றிய தீமை
அடுத்து வந்து கெடுப்பது உறுதி!
தன்னை விரும்பி வாழ்பவன் என்றும்
தவிர்த்திடல் வேண்டும் தீச்செயல் தன்னை!
என்றும் தீச்செயல் செய்யா ஒருவனை
ஏற்றிடும் வையம் கேடிலான் என்றே!