ஊரார் பழியினால் உறுதிபெறும் என்காதல்
ஊரார் அறியார் உயிர்நிலைக்க வாழ்ந்திடுவேன்!
ஊரார் இவளை உணராது பழிதூற்ற
உள்ளம் காதலால் ஓங்கிமிக வளர்ந்ததுவே!
ஊரார் காதலை உரக்கப் பேசிடவே
உள்ளம் மகிழ்ச்சியால் ஊக்கம்பெற நன்றாகும்!
ஊரார் பழியினால் காதலோங்கி வளர்கிறது
ஊர்பழி இல்லை யெனில்வாடிடும் எம்காதல்!
காதல் வெளிப்பட கள்ளுண்ட களிப்பினையே
கண்ட போதில் கைக்கொள்ளும் மீளவுமே!
காதலர் சந்திப் பினொருநாள் செய்தியெங்கும்
திங்களைப் பாம்பு விழுங்கியதாய்ப் பரவியது!
காமநோய், ஊரார் பழிச்சொல்லே உரமாக,
தாயின் தடையோ நீராக வளர்ந்திடுமே!
காமமென் தீயைப் பழிச்சொல்லா அணைத்துவிடும்?
காட்டுத் தீயில் நெய்யூற்ற அணைந்திடுமா?
பிரியேன் அஞ்சா என்றாரவர் பிரிந்திடவே
பிரிவினால் நாணலின் பழிச்சொல்லும் பெரிதில்லை
சரியாய் விரும்பிய அலர்மிகவே செய்தனரால்
சந்திப்பார் காதலர் மணம்புரிந் திடவே!