headlines

img

உடலிருக்க உயிரை எடுப்பதா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள, காலனித்துவ கால விதிகளை நவீன காலத்திற்கேற்ப மாற்றி அமைத்திருப்பதாக மோடி அரசு தம்பட்டம் அடிக்கிறது. ஆனால் உண்மையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்த தத்துவத் திற்கேற்ப அரசியலமைப்பைத் திரித்திருக்கிறது.  

ஒன்றிய அரசு வழக்கமாக பாஜகவை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக முத்திரை  குத்தி சிறையிலடைக்கும். அதனை நீதி மன்றங்கள்  அரசியல் உள்நோக்கத்தோடு “தேசத் துரோக” பிரிவைப் பயன்படுத்தக்கூடாது எனக் கண்டித்திருக்கின்றன. இனி கண்டிக்கக் கூட இடமளிக்கக் கூடாது என்ற வகையில் அந்த பிரிவில் சில திருத்தங்களைச் செய்திருக்கிறது. 

இந்தியத் தண்டனைச் சட்டம் 1860. குற்ற வியல் நடைமுறைச் சட்டம் 1973 மற்றும் சாட்சியச் சட்டம் 1872 ஆகியவற்றில் ஒன்றிய அரசு 2023 டிசம்பரில்  திருத்தம் செய்தது. அதில் தேசத் துரோகப் பிரிவை முழுமையாக அகற்றுவத ற்குப் பதிலாக, அதனை கடுமையாக்கியிருக் கிறது. இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டி ற்கு அச்சுறுத்தும் செயல்களைச் செய்தால் அந்த பிரிவைப் பயன்படுத்தலாம் என்கிறது. 

இதன் மூலம் ஒன்றிய அரசின் மீதான எந்த  விமர்சனத்தையும் இறையாண்மைக்கு எதி ரானது எனக் கூறி கருத்துரிமையைக் கழுத்தறுக்க முடியும். 

அதே போல் சில குற்றச் சட்டங்களில் காவல் துறையின் விசாரணைக் காலம் 15 நாள்கள் என இருந்ததை  60 முதல் 90 நாள் வரை நீட்டித்திருக் கிறது. எப்படி தற்போது  எதிர்க்கட்சி தலைவர் களை அமலாக்கத்துறையை வைத்து கைது செய்து விசாரணையே இன்றி சிறையிலடைத் திருக்கிறதோ அதே போன்று இனி காவல்துறை மூலமும் செய்ய முடியும். 

இந்த சட்டத்திருத்தத்தின் போது கூட உரிய விவாதத்திற்கு ஒன்றிய அரசு அனுமதிக்க வில்லை. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் உள்நோக்கத்தோடு  150 எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தற்காலிக நீக்கம் செய்துவிட்டு நிறைவேற்றியது. 

இதேபோல் “2023 தரவுகள் பாதுகாப்பு சட்டம்” இயற்றப்பட்டது. ஆனால் அதில் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை பரா மரிக்கும் காரணங்களுக்காக ஒன்றிய அரசிற்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சி நினைத்தால் யார் ஒருவரின் பயோமெட்ரிக் தர வுகள் மற்றும் உயிரியல் மாதிரிகளையும் ஒன்றிய அரசு சேகரிக்க முடியும். இது அரசியலமைப்பு நமக்கு அளித்திருந்த  தனியுரிமையையும்  பறிக்கும் எதேச்சதிகாரமாகும்.

“2002 பண மோசடி தடுப்புச் சட்டம் “ முழுக்க  அரசியல் பழிவாங்கல் நோக்கில்  2019 இல் திருத்தம் செய்யப்பட்டது. பல வழக்குகளில் உச்சநீதிமன்றமே கண்டித்திருக்கின்றது. உட லிருக்க உயிரை எடுப்பது போல், இந்திய அரசி யல் சாசனம்  இருக்க அதன்  அடிப்படை கோட் பாடுகளை கருவறுக்கும் வேலையையே மோடி அரசு செய்து வருகிறது. இதனை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.